Sunday, November 14, 2010

குழந்தைகள் தின வாழ்த்துகள்


  • அறியாமையின் அற்புதப் படைப்பு...
  • அன்பினைப் பெறும் கடவுளின் வடிவம்....
  • நாளைய உலகின் நம்பிக்கை....
  • குடும்பத்தில் மகிழ்ச்சிஒளி ஏற்றும் சிறு விளக்கு...
அனைத்து குழந்தைகளுக்கும்  குழந்தைகள் தின வாழ்த்துகள்

Wednesday, September 22, 2010

நண்பர்களே..எழுதுங்கள்


உள்ளச் சிந்தனைகளை உதட்டசைவில் விடாமல்,
உருகொண்ட பேனா மைகொண்டு சித்திரமாய்த் தீட்டிவிடு..
இன்றைக்கு அது வெறும் காகிதம்..
பிற்காலத்தில் அது ஒரு பொக்கிஷம்.!!!!


Saturday, September 18, 2010

அன்பு நண்பன் அஞ்சன் அனுப்பிய காதல் கவிதைகள்

                                     முத்தம்
அன்று அவன் முத்தம் கேட்டான்
அவள் சத்தம் போட்டாள்..
இன்று,
அவள் முத்தம் கொடுக்கிறாள்
சத்தம் இல்லாமல் அவன் "கல்லறைக்கு"..!!

                                   
                                                       **********

                             கல்லறை ரோஜா
இன்று என் கல்லறைக்கு அவள் வைத்த ரோஜாவை,
அன்று கையில் கொடுத்திருந்தால்,
இன்னும் சிலகாலம் உயிருடன் இருந்திருப்பேன்..!!

                                              ********************


                                   கண்ணீர்
எனக்காக நீ ஒரு துளி கண்ணீர் சிந்தினால் போதும் நான் என்னை மறந்து போவேன்..
என்னால் நீ ஒரு துளி கண்ணீர் சிந்தினால்,
அன்றே நான் இறந்துபோவேன்..!!

                                                             ~~~~~~~~~~~~~~~~~~~

கல்லூரியில் செய்முறை வகுப்புகள்


3 மணி நேர jolly lab ல Observation எழுதறது.

Lab hours ல கேண்டீன் சுற்றும் இன்பமான நேரம்.


Ctrl+c , Ctrl+V keys இன் பயன்பாடு.


common printerக்கு சண்டை.


அடுத்தவன் Fileல எடுத்து விளையடுறது.


Record indexல pageno கூட copy அடிக்கிறது.


Model labனு ஒரு மெகா காமெடி.


Sem practical ல pendrive use பண்றது


கடைசி நேர viva preparation.

 
எப்படியோ O/P verification வாங்கும் trick.


இப்படி எல்லாம் 2006 ல இருந்து 2010வரை இருந்த காலேஜ் லேப் சரித்திரம் முடிஞ்சு போனத கொஞ்சம் நினைச்சுப் பாருங்க..


Monday, September 6, 2010

காதல் தூது


உன்னின்று உதிரும் அந்தப் புன்னகைச் சாரல்
நெஞ்சக்கதவுடைத்து என்னுயிர் நனைத்ததே!! - உன்
சின்னக்கருவிழி அசைவினில் என்மனம் இசை பாடியதே!
இன்றோ..

நீ அனுப்பிய மேகத்தூது சொல்லியது யாதெனில்,
"மன்னவனே, என்னில் பதிந்த நீரினும் மிகையாய்
உன்னவள் உனை எண்ணி சிந்துகிறாள் கண்ணீர்" என்று.
இந்தச் செய்தி அறிந்தபோதினும்
உள்ளத்திணவொடு உனைக்காணாவிடில்
நம்முள்ளிருக்கும் அந்தக் காதலின் இனிமை குன்றுமென்று யானறிவேன் கண்மணியே..
சீறும் காற்றின் வேகம்தாண்டி உனைக் காண வருவேன் காத்திருப்பாயாக..

காதல் கவிதைகள் - rajkumar


                             ஜில் ஜில் காதல்

உச்சி முதல் பாதம் வரை
குச்சி ஐஸ் உருகுதடி-உன்
எச்சில் படாதா என்று..

                             அவள்
அவள் வாய் திறந்து பேசியதை
நான் பார்த்துக் கொண்டிருந்தேன் வாயைத் திறந்து...

                                         அன்பே!
இரவில் உன்முகம் காண விழையும் ஆவல் எனக்கும், நிலவுக்கும் ஒன்று தான்..!!
ஆனால்,
நிலவுக்குத் தடையாய் உன் வீட்டு மாடி..
எனக்குத் தடையாய் உன்னோட டாடி..!!!

Tuesday, August 10, 2010

கவிஞனின் திறமை


காடு, மலை,மேடு கடந்து
இமயத்தின் உயரத்தை நொடியில் தாண்டி,

உயர்ந்த வானத்தின் நீலம் கடந்து,
எதிர்படும் கோள்களை எட்டி உதைத்து,

இருளாய் நிறைந்த வெட்ட வெளியிலே,
விண்வெளி கல்லின் மேலே அமர்ந்து,

மேம்பட்ட வரிகளைப் படைக்கும் ஆற்றல்
கவிஞனுக்கு மட்டுமே உண்டு....

Friday, August 6, 2010

கவலை வேண்டாம்

"நம்முடைய சில முயற்சிகளின் விளைவு நமக்கு தெரியாவிட்டாலும், எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும்.ஆக,பயனில்லாத முயற்சி
என எதுவும் இல்லை"