Monday, September 6, 2010

காதல் தூது


உன்னின்று உதிரும் அந்தப் புன்னகைச் சாரல்
நெஞ்சக்கதவுடைத்து என்னுயிர் நனைத்ததே!! - உன்
சின்னக்கருவிழி அசைவினில் என்மனம் இசை பாடியதே!
இன்றோ..

நீ அனுப்பிய மேகத்தூது சொல்லியது யாதெனில்,
"மன்னவனே, என்னில் பதிந்த நீரினும் மிகையாய்
உன்னவள் உனை எண்ணி சிந்துகிறாள் கண்ணீர்" என்று.
இந்தச் செய்தி அறிந்தபோதினும்
உள்ளத்திணவொடு உனைக்காணாவிடில்
நம்முள்ளிருக்கும் அந்தக் காதலின் இனிமை குன்றுமென்று யானறிவேன் கண்மணியே..
சீறும் காற்றின் வேகம்தாண்டி உனைக் காண வருவேன் காத்திருப்பாயாக..

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்