Thursday, March 24, 2011

மீண்டும் கல்லூரி

ஒவ்வொரு நாளும் நாம் எதையோ எதிர்பார்த்து எழுகிறோம்!

நொடிகளை விழுங்கி ,நிமிடங்கள் கரைகின்றன!

முற்றிலும் முடியாமல்,
முடிக்கவும் முடியாததாய் அன்றைய
எதிர்பார்ப்புகள்!

இப்படியே இன்றுவரை என் விடியல்கள்
ஒரு இனிய நாளை எதிர்பார்த்து!

இதோ
அந்த நாள்!

நான்கு வருடங்கள் ஓருயிராய் இருந்து,
கல்பட்ட தேன்கூட்டில் கலைந்து சென்ற
தேனிகளாக எல்லோரும் எங்கெங்கோ!
இன்று நாங்கள் சந்திக்கப் போகின்றோம்!

தோழ முகங்களைப்
பார்க்கப் போகிறோம் என்ற நினைவுகள்
கூட இனிப்பாய் இருக்கிறது!

ஒவ்வொரு நாளும் என் நாள்காட்டியில்
எப்போது வரும் என்று எதிர்பார்த்த தேதியல்லவா அது?

எத்தனை பேர்
என் பெயரை நினைவில் வைத்திருப்பார்களோ தெரியவில்லை!
ஆனாலும் கவலையில்லை.
என் மனதில் பதிந்த முகங்களுக்குப்
பரிச்சயமாகப் போகின்றேன்!

எல்லோரும் இப்படி  நினைத்திருந்த
எல்லாமும் நிஜமாகும் நாள் வந்தது இன்று!!
நண்பர்களே!
நாம் சேர்ந்த இந்நாளைக் கொண்டாடி மகிழ்வோம்!

இதன் பிறகு மீண்டும் பிரிவதை எண்ணாமல்-நாம்
சேர்ந்த இந்நாளைக் கொண்டாடி மகிழ்வோம்!!