Thursday, July 21, 2011

கேள்வியும் பதிலும் - rajkumar

கேள்வி by Tamil (Facebook):
ஆண்கள் தோடுஅணியமுடியும் , மூக்குத்தி அணிய முடியும், முடிவளர்க்க முடியும். அப்படியானால் பெண்கள் ஜீன்ஸ்/ நீளக்காற்சட்டை,குறுகிய காற்சட்டை அணிவது தவறா? பெண்கள் முடியை கட்டையாக வெட்டுவது தவறா? ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு ஒரு நீதியா? ஆண்கள் மது அருந்த முடியும், ஆண்களில் பலர் வெளியே சொல்லாவிட்டாலும் ஏகபத்தினி விரதமிருப்பவர்கள் அல்ல, ஆனா...ல் பெண்கள் அவற்றைச் செய்தால் கண்டிப்பது எதற்காக? தமிழர் பண்பாடு எது? அது ஏற்கனவே சீரழிந்துவிட்டதா? / அல்லது அப்படியே இருக்கிறதா? பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது ஆண்களா? பெண்களா? 
பதில் by rajkumar
உலகம் தோன்றிய பிறகு, மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து சிந்திக்கத் துவங்கினான்.
வேட்டையாட ஆண்கள் வெளியே சென்ற பிறகு தனிமையைப் போக்க பெண்கள் கண்டுபிடித்தவை
தான் விவசாயம்,விலங்குகள் வளர்ப்பு.
இப்படியாக உணவிடுதல் முதல் சந்ததியைப் பெருக்குவது வரை பெண்களின் பங்களிப்பு
உயர்ந்தது என் ஆடவன் கருதினான்.ஆகவே,பெண்களைத் தலைவியாகக் கொண்ட ஆட்சிமுறை வழக்கத்தில்
இருந்தது.பெண்களின் அதீத ஆட்சிப்போக்கும்,மோகவலை கொண்டுஅடிமைப்படுத்தும் நோக்கமும்
அவர்களை வீட்டிலேயே அடிமையாக நட்த்த வகை செய்தது.காலம் கடந்தது.
இன்றும்,அவர்களின் உரிமை வேண்டி போராடியவர்களே வெட்கப்படும் அளவுக்கு பெண்களின்
நாகரிக மாற்றங்கள் இருப்பது நாம் அறிந்ததே!!
ஆக,மொழி-பண்பாடு-நாடு என அனைத்தையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் அங்கு இருப்பது
ஆதிவாசிப் பெண்ணும், அவளது மெத்தனப்போக்கும் தான்.சம உரிமை கொடுப்பது தவறில்லை.
அதனை பெண்கள் உணராமல் நடப்பது தான் தவறு!!
பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது பெண்கள்தான்!!!
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!!

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்