Wednesday, August 3, 2011

இரு வல்லவர்கள்- நான் மலரோடு தனியாக!!

 படைப்பு          : கண்ணதாசன்
ஒலிவடிவம்  : (இங்கு சொடுக்கவும்)

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்.(2)

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்.
(நான் மலரோடு தனியாக ...)

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?(2)

உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்?(2)
(நீ இல்லாமல்...)

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத,
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட, (2)

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற!!(2)

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்.

(நான் மலரோடு தனியாக)

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்