Wednesday, August 24, 2011

குடிமகன்!

இரவு 9 மணி:
கோவை மாநகரத்துல, சரவணம்பட்டி ஒயின் ஷாப் பக்கத்துல நடந்த ஒரு உண்மை சம்பவம்!

கருவாப்பையன் என்கின்ற நம்ம கந்தசாமிக்கு ஏதோ ஒரு கவலை.
வருத்தத்தைக் குறைக்க நெனச்சு, வறுத்த கோழியும், ரெண்டு குவாட்டரும் ஆர்டர் கொடுத்தாரு.

பக்கத்து மேசையில, முக்காடு போட்டுட்டு இருக்கிறது யாருன்னு கொஞ்சம் துண்டை விலக்கிப் பார்த்தா ..
அட நம்ம கருவாட்டுக்கடை கோவிந்தராசு.
அவருக்கு கவலைன்னு ஒன்னும் இல்ல.
ஆனா, நாள் முழுக்க கருவாடு வாசம் பிடிச்ச அவருக்கு, வாய்க்கு ருசியா அதை சமைச்சுப்போட
யாரும் இல்லைன்னு,ஒரு குவாட்டருடன், கருவாட்டு மீனும் ஆர்டர்  கொடுத்தாரு. ஊருக்குள்ள
நல்லமனுசன்னு எல்லாரும் நினைக்கிறதால தான் அந்த முக்காடு!

இப்படி இருக்க, இதுவரை அறிமுகம் இல்லாத இந்த ரெண்டுபேரும் எதேச்சையா
பார்த்துகிட்டாங்க."எந்த ஊரு? என்ன பேரு?"னு ஆரம்பிச்ச பேச்சு, ரெண்டு பேரையும் ஒரே மேசைக்கு
வர வச்சுது. கோழியையும், கருவாட்டையும் மாறிமாறி பகிர்ந்து சாப்பிட்டாங்க.
மூனு பாட்டில் சரக்கும் நொடியில காலியானது.

போதை ஓவரா போக, விட்டுட்டு ஓடிப் போன தன் மனைவியை கோவிந்தன் சகட்டு மேனிக்கு திட்ட ,
தன் மனைவியைத்தான் பேசறான்னு பொங்கி எழுந்த நம்ம கந்தசாமி,
ஓங்கி ஒரு அறைவிட,அய்யோனு கத்தி விழுந்த கோவிந்தனுக்கு அடிச்சது யாருன்னு கூட தெரியல..

எவனோ பகையாளின்னு கைகளை சுத்தி இவரு கந்தசாமியை அடிக்க, ரணகளமானது ஒயின்ஷாப்.

காலையில 9 மணி
கருவாடு மார்க்கெட்:
மனைவியோடு கருவாடு வாங்க வந்தார் நம்ம கந்தசாமி.
கோவிந்தன் கடையைத் தாண்டிப்போகும்போது அவரை எங்கேயோ பார்த்த நியாபகம்.
கோவிந்தனுக்கும் அதே நியாபகம்.

அந்தக்கடையிலேயே கருவாடு வாங்கிட்டு, கந்தசாமி கோவிந்தன்கிட்ட கேட்டாரு ,"உங்க பேரு என்னங்க? இதே ஊரா?"னு!!

நீதி : "குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு!!"

2 comments:

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்