Friday, August 19, 2011

தாலட்டுப் பாட்டு-1

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ!!

கண்ணே உறங்குறங்கு, என் கண்மணியே நீயுறங்கு!
பொன்னே உறங்குறங்கு, என் பூங்கிளியே நீயுறங்கு!

கண்ணை அடித்தார் யார்? எந்தன் கண்மணியைத் தொட்டார் யார்?
பொன்னை அடித்தார் யார்? என் பூங்கிளியைத் தொட்டார் யார்?

யாரடித்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது?
எவரடித்து கண்ணீர் குளமாய்த் தேங்கியது?

மாமன் அடித்தனோ மல்லிகைப்பூ செண்டாலே?
அத்தை அடித்தளோ அரளிப்பூ செண்டாலே?
பாட்டி அடித்தளோ பால் புகட்டும் சங்காலே?
சித்தி அடித்தளோ சின்னஞ்சிறு விரலாலே?

 யாரடிச்சு நீ அழர? கண்ணே நீ கண்ணுரங்கு!
யாரடித்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது?

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ!!

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்