Wednesday, August 24, 2011

ஒரு பொய்யாவது சொல் கண்ணே!

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதை தாங்குமா என் நெஞ்சம் (2)

பெண்மையும் மென்மையும் பக்கம் பக்கம் தான்
ரொம்ப பக்கம் பக்கம் தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்

இரவினை திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ (2)
நிலவின் ஒளி திரட்டி கண்கள் செய்தாரோ
விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கை ரேகை செய்தாரோ
வாடை காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம் தங்கம் பூசி தோள் செய்தாரோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தாரோ?

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே (2)
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே!
கங்கை கங்கை ஆற்றை,
கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றை,
கண்ணில் கையில் தந்தவள் நீதானே !

ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ?
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ?

3 comments:

  1. நல்ல பாடல்!


    (சிறு பிழை - ஒரு - ஓரு )

    ReplyDelete
  2. பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
    இனி வரும் புதிய பதிப்புகளிலும் உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன்!

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்