Friday, August 19, 2011

அம்மா பாட்டு

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!

இலையில் சோறைப் போட்டு,
ஈயைத் தூர ஓட்டு!

உன்னைப் போல நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?

என்னால் உனக்குத் தொல்லை,
ஏதும் இங்கே இல்லை!

ஐயம் இன்றிச் சொல்வேன்,
ஒற்றுமை என்றும் பலமாம்!
ஓதும் செயலே நலமாம்!
ஔவை சொன்ன மொழியாம்!
அஃதே எனக்கு வழியாம்!

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்