Wednesday, October 12, 2011

வாகை சூட வா!!




முக்கிய நடிகர்கள் :
விமல்,இனியா,பாக்கியராஜ்,பொன்வண்ணன்
கதைச்சுருக்கம்:
1966ஆம் ஆண்டு:

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில், எம்.ஜி.ஆர் அவர்கள் நம்பியாரிடம் சவுக்கடி வாங்கும் காட்சியை திரையரங்கில் பார்க்கும் ஒரு நரிக்குறவன் கோபமடைந்து,நம்பியாரை துப்பாக்கியால் சுடும் காட்சியுடன் அமர்க்களமாக துவங்குகிறது படம்.

சர்க்கார் உத்தியோகம் தான் சமுதாயத்தில் மதிப்பையும், சொந்தத்தில் ஒரு மரியாதையையும் கொடுக்கும்.ஆக தன்னால் முடியவில்லை என்பதால்  மகனையாவது அரசாங்க வேளையில் அமர்த்த வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட சராசரி அப்பாவாக இறுதிவரை வலம் வரும் பாக்கியராஜ் முருங்கைக் காயுடன் அறிமுகமாகிறார்..

விமல் படிப்பை முடித்து ஆசிரியர் வேலைக்கு சேர விழையும் நடுத்தர குடும்பத்து இளைஞன்.தந்தையின் விருப்பப்படி,கிராம சபா அமைப்பு அளிக்கும் சம்பளம் மற்றும் சான்றிதழுக்காக  "கண்டேடுத்தான்காடு" என்ற கிராமத்துக்கு,வாத்தியாராக செல்கிறான் நமது கதாநாயகன்."செங்கல் சூலைக்காரா" என்ற பாடலுடன் கிராமம் நமக்கு அறிமுகமாகிறது.

செங்கல் சூளையில் கல் அறுக்கும் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட விமல் படும் பாடு,தேநீர்கடை வைத்திருக்கும் பெண்ணாக வரும் கதாநாயகி இனியா, தனது காதலை வாத்தியாருக்கு புரியவைக்க எடுக்கும் முயற்சிகள்,மக்களை அடிமையாக நினைக்கும் பொன்வண்ணனுக்கு ஊர்மக்கள் கொடுக்கும் பதிலடி ஆகியவற்றை மையமாக வைத்து கதை நகர்கிறது. 

விமல் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைந்ததா?இனியாவின் காதல் கைகூடியதா ? விமலுக்கு சர்க்கார் உத்தியோகம் கிடைத்ததா? அன்றாட உணவுக்கு படியளக்கும் பொன்வண்ணனை பகைத்த ஊர்மக்களின் நிலை என்ன? என்பதற்கு பதில் தான் மீதி கதை.

அருமை:
காட்சியமைப்பு
கதையோடு தொடர்புடைய பாடல் வரிகள்
யதார்த்தமான வசனங்கள்
இனியாவின் இயல்பான நடிப்பு
கதை முழுக்க நம்முடன் உறவாடும் ஊர்மக்கள்
குழந்தை நட்சித்திரங்கள்
.
இயக்குனருக்கு:
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
மின்சாரம் ,தொலைகாட்சி இல்லாத அந்தக் கால மக்கள் வாழ்க்கையையும் , இளமைக்கல்வியின் மகத்துவத்தையும் உணர வைத்த மனதைத் தொடும் திரைப்படத்தை கொடுத்ததற்கு நன்றிகள்.



Monday, October 10, 2011

மொக்கை எனப்படும் நகைச்சுவை விருந்து

கிருஷ்ணதேவராயரின் அரசவையில் தெனாலி ராமன் என்ற ஒருவர் இருந்தாரல்லவா?அவருக்கு இன்னொரு பெயர் "விகடகவி".
விகடங்கள் பேசி சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் கவிஞன் என்பது அதன் பெயர் விளக்கம்.

கொஞ்சம் விளக்கமாக சொன்னால், உங்களது தவறை மற்றவர் நகைக்கும்படியும்,உங்களுக்கு உறைக்கும்படியும் நயம்பட உரைப்பது
விகடம்.
ஆக விகடப் பேச்சின் நோக்கம் சிரிக்க வைப்பதல்ல. ஒரு செய்தியை மறைபொருளுடன் சூசகமாக உரைப்பதுவே
ஆகும்.அனுபவிப்பவர்கள் ஆனந்தமடைவார்கள்.ஆராய்பவர்கள் எரிச்சல்படுவார்கள்.


நேற்று ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியில் லியோனி அவர்கள் சொன்ன ஒரு குட்டிக் கதை இந்த கட்டுரைக்கு
ஒரு மேற்கோளாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு ஊருல பரமசிவன் அப்டின்னு ஒருத்தர் இருந்தார்.
அந்த ஊருக்குள்ள எதாவது பிரச்சினை வந்தாலோ, அல்லது யாருக்காவது
எந்த விஷயத்துலயாவது சந்தேகம் வந்தாலோ இவருகிட்ட தான் கேட்பாங்க.
எதையுமே தெரியாதுன்னு சொல்ல மாட்டார். எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருப்பார்.அதனால அவருக்கு ஊரில "பதில் சொல்லி பரமசிவன்" அப்டின்னு ஒருபட்டப் பெயர் இருக்குது.
ஒரு நாள் அவரு பேருந்து நிலையத்துல நின்னுகிட்டு இருந்தார்.இரவு 10 மணி. இவரைப் பத்தி தெரியாத ஆசாமி ஒரு சந்தேகம் கேட்க அவருகிட்ட வந்தார்.உரையாடல் இதோ!

அவர் : "ஐயா! இதுதான் கடைசி பஸ்சா?
ப.சிவன்: இல்லைங்க, நாளைக்கு காலையில ஒரு வண்டி இருக்கு.
அவர் : அட அது இல்லங்க! இந்த பஸ்சுக்கு முன்னாடி ?
ப.சிவன்: இந்த பஸ்சுக்கு முன்னாடி ரெண்டு Head light இருக்கு.
அவர் :(கோபத்தோடு ) இதுக்கு பின்னாடி?
ப.சிவன்:ரெண்டு Danger light இருக்கு.
(வேறு மாதிரி கேட்க நினைத்த அவர்)
அவர் :இந்த பஸ்ஸ விட்டா ?
ப.சிவன் :விட்டா போய்டும்!

வந்தவர் கடுப்போடு  போய்விட்டார்
இது நமக்கு சிரிப்பினை வரவைக்கிறது. ஆனால் சந்தேகம் கேட்டவருக்கு?

இது போல நடைமுறையில் பல நிகழ்வுகளைப் பார்க்கின்றோம்.
அவைகள் நமக்கு நடக்கும் வரை வேடிக்கையாகவே தெரிகிறது.
சிரிக்கிறோம்,விகடன்களை அளவுகடந்து ரசிக்கிறோம்.

"லொள்ளு சபா",சந்தானம் வசனங்கள் என அனைத்துக்கும் நமது ஆதரவுகளை அளித்து வெற்றிபெற செய்கின்றோம்!
ஆக, மொக்கைகள் என அசிங்கப்படுத்தப்படும் இந்த நகைச்சுவை துணுக்குகளை கேலி செய்யாமல் மனதார நாம் இனி ரசித்துப் பழகுவோம்!

அழுவதற்கு நம் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.சிரிப்பதற்கு அப்படி வாய்ப்புகள் அதிகம் இருப்பதில்லை.

Friday, October 7, 2011

காதலிப்பது எப்படி? (சிரிப்பதற்கு மட்டும்)

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..


2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.


3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.


4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.


5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.


6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்ல!.


7) எங்க எல்லாம் பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்ல!.


8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.


9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்' பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.


10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப
ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும்.
உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.


11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான
விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)


12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க.
முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.




இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

Monday, October 3, 2011

எலிக்கு ஒரு காலம் வரும்!!

பஞ்சதந்திரக் கதைகள் ,பழமொழிக்கதைகள்,அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், திட்டும் வார்த்தைகள் என விலங்குகளும் அவற்றின் பெயர்களும் நம்மிடையே ஆதிகாலம் முதல் புழக்கத்தில் உள்ளன.

அப்படி விலங்குகள் மனிதனை தன் அடிமையாக நினைக்க ஆரம்பித்தால் ,
அவர்களின் அன்றாட வாழ்வில் மனிதனின் பங்கு என்ன ?
சில உதாரணங்கள் இங்கே ..

1.Zebra Crossing - இனி


 2 .  சேமிப்பு உண்டியல் 
                                                                    

 
3.உச்ச கட்டம் !!