Friday, November 18, 2011

படித்ததில் பிடித்தது! - நான் தொலைத்த வாழ்க்கை

[இணையத்தில் படித்த கவிதை இது. பொருள் மாறாமல்,
கவிதை நடைக்காக சில வரிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது]

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை மொத்தமும்
தொலைந்து போகுமோ!!-இது
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

நினைத்த நொடியில்
இதயம் நனைக்கும்
இந்த இனிய வாழ்வு -இனி
இளைய தலைமுறைக்குக் கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
எவனடா?
இருந்தால்
அவன் போல சொர்க்கம் கண்டவன் யாரடா!


 

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்