Thursday, November 24, 2011

உங்களின் நலனுக்காக!!

அனைவருக்கும் வணக்கம்.
தினம்தினம் நாம் எவ்வளவோ செய்திகளைப் படிக்கிறோம்.எத்தனையோ
நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம்! புதிய முகங்களை சந்திக்கிறோம்!
சில பாடங்கள்,சில அறிவுரைகள்,சில ஆதங்கங்கள்..இன்னும் எத்தனையோ!!
ஆக, ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியம் தான். அதைவிட, அந்தநாளில் நம் உடல்நலம் பேண நாம் என்ன செய்கிறோம்
என்பதும் முக்கியம்.

ரஞ்சன் தாஸ்! (முதன்மை செயல் அதிகாரி - SAP India)
42 வயதே ஆன இவர் கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி மாரடைப்பால் இவ்வுலக வாழ்வை நீத்தார்.




இத்தனைக்கும், அவர் தினமும் உடற்பயிற்சி செய்வதையும், நடைபயிற்சி செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
அவரது மறைவிற்கு முக்கிய காரணங்கள்:
  • - அவரது உறக்கம் தினமுன் 4-5 மணி நேரம் மட்டும்.
  • -அதிக வேலைப் பளுவால் விளைந்த மன அழுத்தம்.
ஆக, கணினி பொறியாளர்கள் மற்றும் அனைத்து பிற பணியாளர்களும் இதனைக் கருத்தில் கொண்டு,தினமும் 7 மணி நேரம் உறங்காவிட்டால் அது நெருப்புடன் விளையாடுவது போன்றது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த செய்தி, கொஞ்சம் அதிர்ச்சியளிக்கக் கூடியதும் நம்ப முடியாததுமாக இருந்தது எனக்கு.
பரோட்டா நீரழிவு நோயை உண்டாக்குகிறது. இது செய்தி.
இதன் முழு விவரம் இதோ.

"பரோட்டா செய்வதற்கு நாம் பயன்படுத்தும் மைதா மாவு, கோதுமை மாவினை பனசாயல் பெரோசிடே(benzoyl peroxide) கொண்டு வெண்மையாக்குவதன் மூலம் கிடைக்கிறது.

இந்த வேதிப்பொருள் தலைமுடிக்கு அடிக்கும் சாயத்தில் உள்ள ஒரு பகுதிப்பொருள்.

இது மாவில் உள்ள புரதத்துடன் சேர்ந்து நீரழிவுநோய்க்கு காரணமாகிறது", என்று அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள்.
மேலும் ஐரோப்பா,இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இந்த மைதா தடை செய்யப்பட்ட உணவுப்பொருள் என்பது கூடுதல் தகவல்.

மைதா, மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கிறார்கள் என்று இவ்வளவு நாளாக நினைத்திருந்தேன்.அது சரியா அல்லது இது சரியா என இப்போது குழப்பமாக உள்ளது.

ஆனாலும், பரோட்டா அவ்வளவு ஆரோக்கியமான உணவு இல்லை. அதில் நார்சத்து கிடையாது. ஆகவே அது சீரணத்துக்கு உகந்ததல்ல.
எது எப்படியோ குழந்தைகளின் உணவில், பரோட்டா,மற்றும் இதர பேக்கரி பதார்த்தங்களை தவிர்க்கவும்.

இன்றைய செய்தி இவ்வளவு தான். நாளை மீண்டும் சந்திப்போம்!



2 comments:

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்