Monday, November 28, 2011

சின்னச் சின்னக் கவிதைகள்!

                                                     ஜில் ஜில் காதல்!
உச்சி முதல் பாதம் வரை
குச்சி ஐஸ் உருகுதடி-உன்
எச்சில் படாதா என்று..

                                                      அவள்!
அவள் வாய் திறந்து பேசியதை
நான் பார்த்துக் கொண்டிருந்தேன் வாயைத் திறந்து...

                                                       அன்பே!
இரவில் உன்முகம் காண விழையும் ஆவல் எனக்கும், நிலவுக்கும் ஒன்று தான்..!!
ஆனால்,
நிலவுக்குத் தடையாய் உன் வீட்டு மாடி..
எனக்குத் தடையாய் உன்னோட டாடி..!!!

                                                  தேவதையே!
உறக்கக் கலக்கத்திலே, பிரம்மன் உன்னைப் படைத்தானோ?
என் உறக்கத்தைக் கலைக்க!

                                    சின்னக்குயிலாய் என்னவள்!

காற்றினில் கலைந்தோடும் மேகங்களே!-தென்னங்
கீற்றினில் நுழைந்தோடும் தென்றல் காற்றே!
வயற்காட்டினில் பாய்ந்தோடும் ஓடை நீரே-எந்தன்
மூச்சினில் நிறைந்தவள் பாடுகிறாள்,நின்று
கேட்டபின் செல்லுங்கள் தோழர்களே!


- அன்புடன்!! இணையகவி

1 comment:

  1. துளித்துளியாய் மென்மையாக இருக்கின்றது கவிதைகள் .. வாழ்த்துக்கள்

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்