Monday, January 2, 2012

அதே நேரம் அதே இடம்

கண்களை மூடிக் கற்பனையில் லயித்திருந்தேன்.
கனவுபோலத் தெரியவில்லை கண்முன் வந்த காட்சிகள்.
காலம் கடந்த காதல் நிலவு தேடிவந்ததைப் போல உணர்ந்தேன்.

அன்றொரு நாள்-இதே நேரம்,இதே இடத்தில்,
வெறுமை துளியும் இல்லை!
பசுமை படர்ந்த புல்தரை மீது அமர்ந்து, என் தோள் சாய்ந்து அவள் பேசியபோது
எதிரில் ஒலித்த இரைச்சல்களும் எறும்பின் சப்தம் போல மௌனமாய்த் தோன்றியதே?!!

ஆனால் இன்று.,
நான் தனியாக இதே இடத்தில்!
எங்கே சென்றாள் என்னவள்??
வந்து விடுவாள் விரைவில்,உள்மனம் சொல்லியது மெதுவாக...

வேலை கிடைத்தது-காலம் கடந்தது-அவள் வரவில்லை!

இரவுத்தூக்கம் எட்டாத தூரத்தில்..
வயிற்றிலிட்ட உணவும் உறுத்திய நேரங்கள்.இன்றும் அவள் என்னுடன் இல்லை.
எங்கே சென்றாள்? 

அவளுக்கு பதிலாய் அவள் தங்கை இன்று வந்தாள்!!

அவள் கையில் அச்சிட்ட அழைப்பிதழ்!
"அக்கா பொண்ணுக்கு பெயர் சூட்டு விழா.கண்டிப்பா வாங்க" என்றாள்.
சொன்னவுடன் இடிந்துபோனேன்.
அவள் தொடர்ந்தாள்."அக்கா உங்களை இன்னும் மறக்கவில்லை..அப்பாவின் பிடிவாதமும், அமெரிக்கா மாப்பிள்ளையும்,உங்களுக்கு வேலை இல்லை என்ற காரணமும்அவளை திருமண வாழ்வுக்குள் தள்ளிவிட்டது.இனி என உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.வேறு வழி இல்லை"
சென்றுவிட்டாள்!
காலம் கடந்து விட்டது! இன்று தனியாய் நான்! தவிப்போடு அவள்!!
அவள் ஏன் என் வாழ்வில் வந்தாள்?எதற்கு இந்த துன்பம் தந்தாள்?
எனக்குள் கேட்டுக்கொண்டேன் இதுபோல ஆயிரம் கேள்விகளை.

1 comment:

  1. அதே நேரம் அதே இடம் ... நைஸ்!

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்