Thursday, May 31, 2012

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?




* அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

* மனது புண்படும்படி பேசக்கூடாது.

* கோபப்படக்கூடாது.

* சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

* பலர் முன் திட்டக்கூடாது.

* எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

* முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

* மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

* சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

* மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

* பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

* வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

* பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

* ஒளிவு, மறைவு கூடாது.

* மனைவியை நம்ப வேண்டும்.

* முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

* தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

* உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

* அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

* நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

* எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, செல்ல வேண்டும்.

* மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

* மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

* பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

* மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.

* கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

* சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

* எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

 * சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

* சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

* சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

* குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் இது உன் குழந்தைஎன்று ஒதுங்கக்கூடாது.

* மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

* அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

* மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

* ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

* வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

More:

காதலிப்பது எப்படி? (சிரிப்பதற்கு மட்டும்)

Wednesday, May 9, 2012

வாழ்க்கை ஒரு மாய வேட்டை!

என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

''
தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

''
அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிடமிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்றுவான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் ''இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை'‘என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!
                                                                                   - சுவாமி சுகபோதானந்தா