Tuesday, June 12, 2012

சாகக் குடி!


துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
கடந்த வெள்ளிக்கிழமை, இந்தக் குறளின் காட்சிவிளக்கத்தை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காணமுடிந்தது.

பேருந்து நிலையம் அருகில் செல்லும் நெடுஞ்சாலை, எப்போதுமே நெரிசல் மிகவே இருக்கும்.அன்றும் அப்படித்தான்.சின்ன இடைவெளி கிடைத்ததும் நான் ஓட்டமாக சாலையைக் கடந்து, பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தேன்.ஓரிடத்தில் ஒரு சிலர்
கூடி நிற்பதைப் பார்த்து அங்கே சென்றேன்.வேடிக்கை பார்ப்பது நம்மவர்க்கு புதிதல்லவே!

காவல் துறை அதிகாரி அங்கே போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.இந்தக் கூட்டத்தை அவ்வப்போது கலைத்துக் கொண்டும் இருந்தார்.அங்கே ஒரு இந்திய "குடிமகன்",சுயநினைவே இன்றி படுத்துக்கிடந்தான்.அவன் இவன் என சொல்வதில் தவிறில்லை என நினைக்கிறேன்.எதிரில் ஒரு பிரபல புத்தகக்கடை.இந்த ஆளை எழுப்பும் முயற்சியில் அவர்கள் ஒரு குடம் நீரை வீணாக்கியதை உணரமுடிந்தது.

ஆனாலும் ஒரு துளி அசையாமல் படுத்துக்கொண்டிருந்தான்.நான் முதலில் பார்த்தபோது செத்துவிட்டானோ எனத் தோன்றியது.இரண்டு நிமிடம் உற்று பார்த்தபோது மூச்சுவிடுகிறான் என்பதன் அறிகுறி தெரிந்தது. பிறகு நான் அந்த இடத்தைவிட்டு
அகன்றுவிட்டேன்.
[களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று]
ஒருவன் குடிபோதையில் இருக்கும் போது அவனுக்கு உதவி செய்வதோ புத்திமதி கூறுவதோ வீண்வேளை என வள்ளுவர் இன்னொரு குறளிலும் சொல்லி இருக்கிறார் அல்லவா.நமக்கேன் வம்பு என பேருந்தில் ஏறி ஊர் சென்றேன்.
 [கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்]
இப்படி உணர்விழந்து,மானம் இழந்து மதி கெட்டு நம்மை மற்றவர் கேவலமாகப் பார்க்கும்படி செய்யும் மதுவினை, காசு கொடுத்து
அவன் வாங்கிப்பருகுவதை என்னவெனச் சொல்வது?
[கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு]
 இவன் மது மயக்கத்தில் இல்லாத போது, இவன் இபோது கிடக்கும் நிலையில் உள்ள மற்றொருவனைப் பார்த்தாலாவது
இவனுக்குள் மாற்றம் வருமோ என்னமோ? வள்ளுவனின் அதே கேள்வி எனக்கும்!!


Thursday, June 7, 2012

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?


1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.

2. காலையில் முன் எழுந்திருத்தல்.

3. எப்போதும் சிரித்த முகம்.

4. நேரம் பாராது உபசரித்தல்.

5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.

7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.

8. அதிகாரம் பணணக் கூடாது.

9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.

10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

11. கணவனை சந்தேகப்படக் கூடாது.

12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.

13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.

15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.

20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.

21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.

23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.

25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.

26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.

31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.