Thursday, November 22, 2012

காதல்-மணம்




"ஹலோ அப்பா!"
"சொல்லுமா பிரியா! எங்க வந்துட்டு இருக்க?"
"GP சிக்னல் தாண்டியாச்சு.2நிமிஷத்துல பஸ் கணபதி வந்துடும்.சீக்கிரம் வண்டிய எடுத்துட்டு பஸ் ஸ்டாப்புக்கு வாங்கப்பா!"
"வரேன்மா.நீ பாத்து வா!"
" ம்.. சரிப்பா!"

டொக்—

"ஹலோ புரோக்கரா? இன்னும் 5 நிமிசத்துல பிரியா, வீட்டுக்கு வந்துடுவா..மாப்பிள்ளை வீட்டுல சொல்லிடுங்க.நேரத்துக்கு வந்துடுங்க!"
"சரிங்க வேலு! அரைமணி நேரத்துல நாங்க அங்க இருப்போம்!"
"நல்லதுங்க..வணக்கம்!"
"வணக்கம்"

டொக்—

"டேய் சிவா.அப்பாவே பஸ் ஸ்டாப்புக்கு வரேன்னு சொல்லிட்டாரு.நீ வண்டியோட அங்க வந்து தொலைக்காத! ஏற்கனவே சந்தேகப்படுறாங்க.சரியா?"
"ம்..சரிங்க பிரியா மேடம்!"
"ம்..அந்த பயம் இருக்கட்டும்.அப்புறம்"
"அப்புறம் என்ன அந்தப்புரம் தான்! சொன்ன மாதிரி நாளைக்கு லஞ்ச் முடிச்சுட்டு Brook fields வந்துடு.மேட்னிக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு!"
"மறக்க மாட்டேன்டா..கணவன் சொல்லுக்கு வேறு சொல் உண்டா என் பிராணநாதா!"
"அட..பாருங்கப்பா!! சரி..நாளைக்கு பார்க்கலாம்!"
"ம்..பை பை!"
"அவ்ளோ தானா!"
"மீதி நாளைக்கு! பை"
"ம்.ம்.."

டொக்—

3 comments:

  1. இன்றைய நிலையின் விபரீதம் புரிகிறது...

    tm1

    ReplyDelete
  2. இளைய சமுதாயத்துக்கு காதல் என்ற வார்த்தை தெரிந்திருக்கிறது.அது நம் பாடப்புத்தகங்கள் போல புரியப்படாமலேயே படிக்கப்படுகின்றன.!

    ReplyDelete
  3. நமக்கென்று வராதவரை அனைத்தும் சாதாரணமாகவே தோன்றும்...

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்