Wednesday, November 21, 2012

விபரீத கனவு - உனக்கும்-எனக்கும்



"அவ்ளோ பயங்கர கனவாடா மச்சி அது?"

 "ஆமாம் ரவி! நெஜ கொலை செஞ்ச ஃபீல் இன்னும் இருக்குடா!"

"அப்படி என்ன கனவு..என் கனவு மாதிரி இன்ட்ரெஸ்டா இருக்குமா?" 

"உன் கனவு பத்தி எனக்கு தெரியாதுடா..மொதல்ல கேளு..ஒரு இருண்ட காடு.நீளமா நடுவுல ஒரு ரோடு.ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் பெரிய பெரிய மரங்களா தெரியுது!சாயந்திரம் ஒரு 6 மணி இருக்கும்.லோகேஷ் அண்ணன் பைக்-ஐ நான் ஓட்டிட்டு போனேன்.அவரு பின்சீட்டுல உட்கார்ந்துகிட்டு இருந்தாரு.பயங்கர வேகமா போனேன்.ஸ்பீடாமீட்டர் முள் ஒரு முழுவட்டமே அடிச்சுது.அவ்ளோ வேகம்.!"

"நீயா?!சரி மேல சொல்லு!"

"ம்..அப்படி போகும்போது திடீர்னு அவர் கத்தினாரு.."தம்பி..வண்டிக்குள ஒருத்தன் வந்து விழுந்துட்டான்"னு.உடனடியா வண்டியை நிறுத்தி பின் சக்கரத்தைப் பார்த்தோம்.ஒரு ஆள் தலையை சக்கரத்துல விட்ட மாதிரி கிடந்தான்."ஓ.."னு அழுதான்.ரெண்டுபேரும் அவன் தலையை வெளியில எடுத்தோம்."கொலை..கொலை"னு கத்தினான்.பார்க்க வாட்ச்மேன் மாதிரி இருந்தான்டா..அப்புறம்.."

"டேய்..நிறுத்து.அவனுக்கு தலையில முடி இல்லையா?கால்ல ஒரு ஷு மட்டும் போட்டிருந்தானா?"

"மச்சி..ஆமாடா.உனக்கு எப்படி தெரியும்?"

"நான் ஒரு கனவு கண்டேன்னு சொன்னேன்ல.அதுல நான் ராணுவ யூனிபார்ஃம் போட்டுகிட்டு ஒரு தீவிரவாதியை துப்பாக்கி முனையில துரத்தினேன்.அவன் வேகமா ஓடி ஒரு காடுக்குள்ள புகுந்துட்டான்! அவன் தான் உன் வண்டியில விழுந்துட்டானா?என்ன ஆச்சு அப்புறம்!!"

"அப்புறம்..அவனை என்ன ஆச்சுனு கேட்டேன்.தலை வலிக்குது.அமுர்தாஞ்சன் வாங்க போறேன் னு சொல்லிட்டு ஓடிப்போய்ட்டான்!"

"கனவு மாதிரி இருக்கு.ஆனா..எப்படி ஒரே ஆள் ரெண்டுபேர் கனவிலும் வந்தான்? ஆச்சரியமா இருக்குடா!"

"எனக்கும் தான் மச்சி..அங்க பாரு சிவா வர்றான்..எப்போ வர சொன்னா எப்போ வர்றான் பாரு"

"ரவி மற்றும் ராஜ்..ரொம்ப சாரி.வர்ற வழியில ஒரு சின்ன பிரச்சினை.அதான் லேட்."

"உனக்கு என்ன பிரச்சினை.பைக்ல தான வந்த?"

"ஆமாடா. எனக்கு இல்ல..நம்ம நாட்டுக்கு! யாரோ ஒரு தீவிரவாதியை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போனாங்க.நடு ரோட்ல இழுத்துட்டு போனாங்க.அதான் ட்ராபிக்.அதனால நான் லேட்!"

"தீவிரவாதி எப்படி பட்டப்பகல்ல மாட்டினான்?அப்புறம் எப்படி இருந்தான் அவன்.நீ பார்த்தியா!"

"பார்க்கவே காமெடியா இருந்தான்டா அவன்.ஒரு ஷூ,மொட்டை தலை..தெருவுல ஒரு பெட்டிக்கடையில நின்னு, தலை வலிக்கு அமுர்தாஞ்சன் வேணும்னு கேட்டானாம்.பக்கத்துல நின்னுகிட்ட இருந்த போலீஸ் பிடிச்சுட்டு போய்ட்டாங்க!"

"சிவா.எனக்கு மயக்கம் வருதுடா,..ரவி என்னை கொஞ்சம் பிடிச்சுக்கோ!"


2 comments:

  1. ஹா ஹா ஹா !!
    அருமையான நடையும், நீங்க சொன்ன விதமும் எனக்கு பிடிச்சிருக்கு.....

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்