Thursday, December 20, 2012

நான் பிடித்த படங்கள்!

"இந்த கார்-கிட்ட நான் நின்னுக்கிறேன்.இப்போ அந்தா எதிரில தெரியுற மரத்துக்கு பக்கத்திலிருந்து என்ன போட்டோ எடுத்து எப்படி இருக்கும்?" என கார் வைத்திருக்கும் தன் நண்பரிடம் ஆர்வமாய் வினவுகிறார் 50 வயதைத்தாண்டிய அன்பர் ஒருவர்.அவர் பதிலுக்கு,"ம்..நன்றாகத்தான் இருக்கும்" என்று சொல்லிவிட்டு புன்னகைக்கிறார்.

புகைப்படம் அவர் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும்,எடுக்கும் கோணங்களைப்பற்றி (Camera Angles) அவருக்கு கொஞ்சம் தெரிந்திருக்கிறது.இதுபோலத்தான் நானும்.சிறுவயதுமுதலே பார்த்துப்பார்த்துப் பழகிய புகைப்படக்கலையை சோதித்துப்பார்க்க நினைத்தேன்.

அதன் விளைவு,என்னுடைய இரண்டாம் மாத சம்பளத்தில் புகைப்படக்கருவி ஒன்றை வாங்கிவிட்டேன் (Kodak-digicam).எவ்வளவோ கோணங்கள்(angle),மாற்று அமைப்புகள் (modes) என இருந்தும் நான் அதிகம் விரும்புவது,மிக அருகில் எடுக்கப்படும் close-up புகைப்படங்கள் தான்.அதுபோலவே சூரிய உதயம்,அந்திமாலை என இயற்கை வண்ணங்களைப் பிடித்துவைப்பதிலும் அலாதி ஆசை எனக்கு.அப்படி எடுத்த சில புகைப்படங்கள் உங்களுக்காக.

(You can see full-size image when you clicked on image)

1.எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து காலை 6 மணிக்கு எடுக்கப்பட்ட சூரிய உதயம்.
அமைவுகள்:
Exposure:    0.002 sec (1/500)
Aperture:        f/5.6
Focal Length:    19.5 mm
ISO Speed:    64
Flash Used:    No

2.சூரிய குடும்பத்தில் பூமி இருக்கிறது.பூமிக்குள் சூரியன் இருந்தால் எப்படி இருக்கும்? இங்கு பாருங்கள்.

அமைவுகள்:
Exposure:    0.001 sec (1/1000)
Aperture    :    f/5.6
Focal Length:    19.5 mm
ISO Speed:    64
Flash Used:    No




3.பனிக்கூழ் உருகும் முன் எடுத்தது.பொள்ளாச்சி,அம்பரா உணவகம்
அமைவுகள்:
Exposure:    0.05 sec (1/20)
Aperture    :    f/3.1
Focal Length:    6.5 mm
ISO Speed:    160
Flash Used:    No

4.பொள்ளாச்சி ஆற்றங்கரையோரம் அழகாய்ப் பூத்திருந்த நட்சத்திரப்பூவின் அழகிய தோற்றம்.
அமைவுகள்:
Exposure:    0.01 sec (1/100)
Aperture    :    f/8
Focal Length:    6.5 mm
ISO Speed:    64
Flash Used:    No





மேற்கண்ட அனைத்து ஒளிப்படங்களும், இயற்கை ஒளியில் எடுக்கப்பட்டவை.மின்னொளி (flash) பயன்படுத்தப்படவில்லை.


எப்படி இருக்கிறது இவை.உங்களின் வார்த்தைகளை பின்னூட்டமிடுங்கள்.


Monday, December 17, 2012

தமிழில் பேசுவது கேவலமான ஒன்றா?

இனிய தமிழ்மொழியில் ஓரிரண்டு வாக்கியங்களை ஓசை பட,இலக்கணப்பிழையின்றி நண்பர்களுடன் நம்மால் பேசமுடியுமா? 

நான் பேசினேன்.சிரித்தார்கள்.ஏதோ கோமாளித்தனம் செய்துவிட்டவானாய் என்மேல் ஏளனப்பார்வை வேறு.என்னைப் பார்த்து அவர்கள் சிரிக்கவில்லை.அப்படியானால் எதற்குச் சிரித்தார்கள்? நான் பேசிய தமிழைக்கேட்டா? ஏன் அப்படி? தமிழ்நாட்டில்,தமிழ் மக்களுடன் தமிழில் பேசுவது என்ன அவ்வளவு கேவலமான ஒன்றா? வியப்பளிக்கிறது.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
  என பாரதி சொன்னார்.அதன்படி பிறநாட்டு செல்வங்கள் திரட்டப்போய், அவர்களின் கலாச்சார மோகத்திற்குள் நாம் வீழ்ந்துகிடக்கிறோம்.

அவர் எதற்கு பயந்தாரோ அது நடந்துவிடும் போல இருக்கிறது.
"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"


தமிழ்நாட்டிற்குள்ளேயே இந்த நிலைமை எனில், வெளிநாடுகளில்? இந்தக்காணொளியைப் பாருங்கள்.கண்ணீர் வரவழைக்கும் தமிழின் எதிர்காலம் பற்றிய குறும்படம்.