Wednesday, January 23, 2013

இதயத்திருடி...


நினைக்கவே கூடாது என்று தான் நினைக்கின்றேன்.
 கண்களை விட்டு மறைய மறுக்கிறது அவள் முகம்!
கனவில் நினைப்பவர்கள் கண்முன் வருவார்களா?
அன்று நான் கண்டேன்!
வெள்ளை உடையில் தேவதையாய்!

கனவிலும் அவள்!நினைவிலும் அவள். சிலநாள் சுற்றி நடப்பவை அறியும் உணர்வில்லை எனக்கு!
என்ன ஆயிற்று ?
"காரணம் அவள் தான்.மறந்து விடு" -உள் மனம் கிசுகிசுத்தது..
அதோ சந்தர்ப்பங்கள் வருகின்றன, 'சண்டாளி' இவளென மறந்து தொலைக்க...

அதிகாலை நேரம்.
ஜோடியாய் அவள் இன்னொருவனுடன் மோட்டார்வண்டியில்.
படு வேகமாய்...மிக நெருக்கமாய்...
மனமுடைந்து,உணர்விழந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.


என்னவள் இல்லை இவள் !

சிலரை பிடிப்பதில்லை நமக்கு.
நமக்கு சொந்தமான ஒன்று அவர்களிடம் இருக்க,
நினைவுகளை நம்மால் தொலைக்க முடிவதில்லை.
அவள் எதை எடுத்துக்கொண்டாள் என்னிடமிருந்து?.
ஏன் மறக்க முடியவில்லை அவளை?

இன்று காலை.
அதே சாலை.ஆட்கள் கடந்தபடி இரைச்சலாய்.
பச்சை உடையில் அந்த பாரிஜாதம்! அதோ வருகிறாள்.
அவள் நடைக்கு ஜதி சொல்லின என் இதயத்துடிப்புகள் !
நெருங்கி வருகிறாள்."நீ பறிகொடுத்த இதயம் திரும்ப வேண்டுமா?!"
கேட்டபடி கடக்கின்றன அவள் ஒற்றைப் பார்வையும்,
உதட்டோரப் புன்னகையும்!

- ராஜ்குமார்

1 comment:

  1. நல்லாருக்கு நண்பரே, நல்ல உணர்வுகள். தொடர்ந்து எழுதுங்க, நான் பின்தொடர்ந்து படித்து ரசிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்