Thursday, February 14, 2013

காதல் கசக்குதய்யா!! - காதலர் தின சிறப்புப் பதிவு


பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சங்ககால இலக்கியம் முதல்,வாழ்க்கை முறை வரை, தமிழர்களால் உடன்பிறந்த உணர்வாய் பார்க்கப்பட்டது காதல்.ஏதோ மேலைநாட்டுக்காரன் கண்டுபிடித்த அதிசயப் பொருள்போல் இன்றையநாளில் காதலை நினைப்பது நமக்கு வழக்கமாய்ப் போய்விட்டது.






நம்ம விக்கிபீடியா என்ன சொல்லுதுன்னா....

"இது மேலை நாட்டுப் பண்பாடுகளை திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் நினைவுப் பரிசுப் பொருட்களை விற்கும் வணிகமயமாக்கம்"
 
அதை விடுங்கப்பா. இந்த நாளில் கொஞ்சம் சந்தோசமா அவர்களை நினைத்து நகைத்துக் கொள்வோம்!


(இனி வரும் பகுதிகள் இணையத்தில் படித்தவை! -சிரிக்க சிந்திக்க என்ற கோணத்திலேயே இதை நோக்குக)

பகுதி 1 : அந்தநாள் நியாபகம்


ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் ­ கண்டார்.

மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?

20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?

இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்!! :)


பகுதி 2 : நம்பிக்கை

"கடைசிக் காட்சி வரை காதலை சொல்லத் தயங்கும் "இதயம்" முரளியை விட,
காதல் நாடகமாடி, கம்பி நீட்டப் பார்க்கும், "நான் அவனில்லை" ஜீவனைத்தான், அதிக பெண்கள் நம்புகிறார்கள்!"

பகுதி 3 : பயம்

"முன்பெல்லாம் லவ் பண்றவங்க, எங்க யாராவது நம்மள பிரிச்சிடுவாங்களோன்னு பயப்படுவாங்க!!!

இப்ப என்னடான்னா! எங்க யாராவது நம்மள சேர்த்து வச்சிடுவாங்களோன்னு பயப்படுறாங்க!!!!"

பகுதி 4: நிறத்தை வைத்து...

இன்று மட்டும் நாம் அணியும் ஆடை நிறத்தை வைத்து நம்மை ஏற இறங்க பார்க்கும் மக்களைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. யாருய்யா இத கண்டுபிடிச்சானுங்க?

உங்கள் பார்வைக்கு:

Pink       : Going to propose.
Orange   : Already in love.
Blue       : Applications welcomed.
Black      : Not interested in love.
Yellow    : Failure in love.
Green      : Accepted a love.
Red          : Already booked.
White      : Double sided.





எப்படியோ, இன்னும் 10 மாசத்துல குழந்தைகள் தினம் வருது. இதை மனதில் நிறுத்தி, இந்நாளை கவனமாக அதோடு சிறப்பாகக் கொண்டாடுங்கள்!!

Also Read : "சீ சீ இந்தப் பழம் புளிக்கும்!"

 இன்றைய காதலர்களுக்காக நான் அடிக்கடி சொல்லும் என் சொந்த தத்துவத்தைச் சொல்லி பதிவை நிறைவு செய்கிறேன்!!

"இளைய சமுதாயத்துக்கு காதல் என்ற வார்த்தை தெரிந்திருக்கிறது.அது நம் பாடப்புத்தகங்கள் போல புரியப்படாமலேயே படிக்கப்படுகின்றன!!"

- அன்புடன் ராஜ்குமார்



Tuesday, February 12, 2013

சில அரிய சுவையான தகவல்கள்! - பாகம் 2


லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம் (தமிழில் & in English)



அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்குச் சொல்லித்தாருங்கள். ஆனால், பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் என புரியவையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.

அவனைக் கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.

In English:

He will have to learn, i know, that all men are not just,all men are not true. But teach him also that for every scoundrel there is a hero; that every selfish politician, there is a dedicated leader...

teach him that for every enemy there is a friend, steer him away from envy, if you can teach him the secret of quiet laughter. Let him learn that the bullies are easiest to lick...teach him if you can the wonders of books..

but also give him the quiet time to ponder the the eternal mystery of the birds in the sky, bees in the sun, and the flowers on a green hillside.

In the school teach him it is far honorable to fail than to cheat...teach him to have faith on his own ideas, even if everyone tells him they are wrong. teach him to be gentle to gentle people, and tough with the tough.

Try to give my son the strength not to follow the crowd when everyone is getting to the band wagon...

teach him to listen to all men...but teach him also to filter all he hears on the screen of truth, and take only the good that comes through. 

Teach him if you can, how to laugh when he is sad...teach him there is no shame in tears, Teach him to scoff at cynics and to beware of too much sweetness....

Teach him to seek his brawn and brains to the highest bidders but never to put a price-tag on his heart and his soul.

Teach him to close his ears to a howling mob and to stand and fight if he is right. treat him gently, but do not cuddle him because only the test of fire makes fine steel.

 Let him have the courage to be impatient...let him have the patience to be brave. Teach him always to have sublime faith in  himself, because then he will have sublime faith in mankind.

this is a big order, but see what you can do...he is such a fine little fellow, my son!

-Abraham Lincoln

சில அரிய சுவையான தகவல்கள்! - பாகம் 1


1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

11.எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

12.எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.


13. மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

14. மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

15.ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

16. 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.