Wednesday, October 5, 2016

மழையே மழையே! (கவிதை)

காகித வானம்,
மழையில் நனைகின்றது!
சூரியனும் இல்லை..சந்திரனும் இல்லை
நின்று குடைபிடிக்க!


வி
ண்மீன்கள் இருக்கும் இடம் கூடத் தெரியவில்லை!


வானம் மறைந்து விட்டால்,
கவிதைக்கு எங்கே செல்வேன்?


ண்ணாடிக் குடையுடன் எழுகின்றேன்,
ஆகாயம் கிழியாமல் காப்பாற்ற!


"ஏ மழையே நின்றுவிடு!
சந்திர வெளியை விட்டுவிடு!
கோடிகள் எல்லாம் ஈடாகா,
என் கவிதைகள் தருகிறேன் உனக்காக! ஏ மழையே நின்றுவிடு!"


குடைபிடித்தும் நனைந்தேன் நான்!

ன்சொல் கேளாமல் விழுகின்ற துளிகளில்,
என்னையும் உணராமல் கரைந்து போகிறேன்!
குளிர்ந்த காற்றில் மிதக்கும் சாரலில்,
என்னைக் கழற்றி நனைந்து மகிழ்கிறேன்!


ப்போது வானம் உடைந்தாலும் எனகென்ன!
சொர்க்கம் என் அருகினில் மழையாய்ப் பொழிகையில்...



- Rajkumar PP

Wednesday, September 28, 2016

சின்னதாய் ஒரு காதல் கதை!

ஒரே பள்ளியில்,ஒரே வகுப்பில்சேர்ந்த இருவருக்கும் ஒரேவயதுதான்!மூன்று வயதில் காதல்வருமா? வந்தது அவனுக்கு!அவள்,அவனை விட படிப்பில் சுட்டி!அருகில் வந்து அனுமதிகேட்காமல் அமர்ந்து பேசுபவள்!

கடையில் என்ன வாங்கிவந்தாலும் பங்கிட்டு அவனுக்கும்கொடுப்பவள்!

இதுபோன்ற பல காரணங்கள்இருந்தது அவனது காதலுக்கு!

அன்று வகுப்பு துவங்கியது!அவனுக்கு கவனம் முழுக்க அவள் மீதுதான்!

உடன் இருந்த நண்பன்சொன்னான்!,"டேய்.அவகிட்ட லவ்சொல்லிடு.இல்லனா அந்தசோடாபுட்டி உஷார்

பண்ணிடுவான்!" என்று!

"அவ கிட்ட போனாவே, என்னமோமாதிரி இருக்குடா.எப்படிசொல்றது?" என்று நண்பனைக்கேட்டான்

"ஒன்னுமில்ல டா..எதுவும்பேசவேணாம்! அவ முன்னாடிபோய் நின்னு, உன் காதுல விரல்வச்சு,யானை காதாட்டுற மாதிரிபண்ணு!அதுக்கு பேர் தான்காதலிக்கிறது! அவபுரிஞ்சுக்குவா!" என்ற

விஞ்ஞானப்பூர்வ அறிவுரையைநண்பன் வழங்க,அதை முயற்சித்துப் பார்ப்பதென அவன்முடிவு செய்தான்!

வகுப்பு முடிந்து அனைவரும்வெளியே சென்றுவிட, அவளும்அவனும் தனியாக வகுப்பில்!

"சாப்பிடப் போகலயா?" என தனதுLunch Box எடுத்துக்கொண்டுஅவள் கேட்க, இவன் எதுவும்பேசாமல்

அவள் முன்னால் சென்று"காதலித்து"க் காட்டினான்!அவ்வளவுதான்! அவள் கீழேபுரண்டு புரண்டு அழ

ஆரம்பித்தாள். சத்தம் கேட்டு ஆயாஎன்னவெனக் கேட்க,அவள் என்னசொல்வாளோ என்ற பயத்தில்அவன் நின்று கொண்டிருந்தான்.

"எனக்கு அம்மா வேணும்! வரச்சொல்லுங்க!" என அவள்நிறுத்தாமல்அழுதுகொண்டிருந்தாள்!

ஆயா, அவளைக் கூட்டிக்கொண்டுவெளியே சென்ற உடனே, அவனும்ஒரே ஓட்டமாக வெளியேசென்றான்!

அறிவுரை சொன்ன நண்பனைக்கடிந்து கொண்டான்! "Bubble Gumலவிட்ட குமிழ் மாதிரி அழகா இருந்தஅவ முகத்தில் கண்ணீரைப்பார்க்க வச்சிட்டியே!.போடா!" எனதிட்டித் தீர்த்தான்.

அடுத்தநாள் அவளது போலிஸ்அம்மாவுடன் பள்ளிக்கு வந்து,ஆசிரியையிடம் ஏதோ புகார்செய்துகொண்டிருந்தாள்! அவள்அம்மா சொன்ன கடைசி வார்த்தைமட்டும் தெளிவாகக்

கேட்டது! "இனி என்பொண்ணுகிட்ட அந்தமாதிரி சொன்னான்னு தெரிஞ்சா,அப்புறம் நான் யார்னு காட்ட

வேண்டியதுவரும்!".அவ்வளவுதான்! அதன்பிறகு அவளை அவன் பார்ப்பதுகூட இல்லை.அவளும் தான்!

அவள் அம்மாவிடம் என்னசொல்லியிருப்பாள் என்றகேள்விக்கு கடைசிவரைஅவனுக்கு விடைகிடைக்கவில்லை.

வருடங்கள் கடந்தன! பள்ளியில்பிரிந்த காதல், கல்லூரியில்சேர்ந்தது! ஒரே அலுவலகத்தில்சேர்ந்த அவர்களுக்கு காதலிக்கநேரம் உண்மையில்இல்லாமல்தான் இருந்தது!பெற்றோர் எதிர்ப்பை சம்மதமாகமற்றிய பிறகே இருவரும்திருமணம் செய்துகொண்டனர்!

முதல் இரவில் தனது நீண்டகாலக்குழப்பத்தைப் பற்றி அவளிடம்கேட்டான்! "உனக்கு நியாபகம்இருக்கா! நான் School-ல உங்கிட்டஇப்டி பண்ணிக்காட்டினேன் ல.அப்போ எதுக்கு அழுத?.வீட்லஎன்ன சொன்ன?" என காதில்கைவைத்தபடியே கேட்டான்!

"பின்ன! கொழுக்மொழுக்னுஇருந்த என்னை பார்த்துயானைனு சொன்னா கோவம்வராதா?" எனக் குழந்தைத்தனமாகக் கேட்டாள்!அவனுக்குத்தூக்கிவாரிப்போட்டது! "அப்படியா நினைத்தாய்?" என

ஆச்சரியமாகக் கேட்டான். "வேறஎன்னவாம்? எனக்கு ரொம்பவருசம் கோபம் உன் மேல!அப்புறம் எனக்கே என்னை பார்க்கஅப்படி தெரிய ஆரம்பிச்சது!அப்புறம், 12 ஆம் வகுப்பு முடிஞ்ச

உடனே Slimஆகிட்டேன்! எல்லாம் நீசொன்ன comments தான்காரணம்!.நம்ம காதலுக்கும்உன்னோட அந்த அக்கறை தான்காரணம்" எனச் சொல்லிமுடித்தாள்!

அவன் எதுவும் பேசவில்லை.தனது அசட்டு நண்பனின்ஐடியாவையும், தனதுமுட்டாள்தனமான புரிதலையும்நினைத்துப் புன்னகைத்துக்கொண்டான்!

காரணம் புரியவில்லை எனினும்,அவளும் புன்னகைத்துக்கொண்டாள்!

கதை புன்னகையோடு முடிகிறது!

- ராஜ்குமார்

Thursday, September 22, 2016

உண்மை எனும் கானல் நீர்

உண்மை.
எத்தனையோ நேரங்களில் மறுக்கப்படுவது..
பணம் செல்வாக்கு பதவி கொண்டு மறைக்கப்படுவது..
வெளிப்பட வேண்டி காத்திருக்க வைப்பது.. வெளிவந்துவிடுமோ என பயப்பட வைப்பது..

உண்மை.
நல்லதா..கொடியதா?
நண்பனா துரோகியா?
ஆக்கமா அழிவுசக்தியா?

உண்மை...
மறைந்தால் ரகசியம்!
மறைத்தால் கபடம்!
வெளிப்பட்டால் அம்பலம்!
வணங்கினால் கடவுள்!
ஏய்த்தால் ஆயுதம்!

ஆக,கூர்ந்து நோக்கினால் ,நம் மனம் எல்லா பொழுதிலும் உண்மையை வேண்டுவதில்லை என்பதே கசப்பான உண்மை..!

ஆகவே தான், ரகசியங்கள்,கடவுள்கள் போற்றப்படுகின்றன.

உடைக்கப்பட்ட உண்மைகள் சுவாரஸ்யத்தை இழக்கின்றன.!

சிந்திப்போம்.சிறப்போம்👍

பொய் வாழவிடாது..!
உண்மை சாக விடாது..!

உண்மையை மறைக்க ஆயிரம் பொய் அவசியமாகிறது..
பொய்களைத் தவிர்க்க ஒரு உண்மை போதுமானதாகிறது☺☺

- ராஜ்குமார்

Wednesday, September 21, 2016

உன் வாழ்க்கை உன் கையில்

உணவு பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்துவிட்டு பிடித்த உணவை வரவழைத்து உண்ணலாம்!
பிடித்த உறவுக்கு நம்மைப் பிடிக்கவில்லை எனில்,உணர்வுகளைப் புரியவைத்து மாற்றத்தை ரசிக்கலாம்!
உலகம் பிடிக்கவில்லைஎனில், உலகத்திற்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்!

நம் வாழ்க்கையின் போக்கு என்றுமே நாம் நினைத்தபடி அமைய வேண்டுமெனில், மாறவேண்டும் நாம் சில நேரம்!

முத்து சிப்பிக்குள் சுரக்கும்போதுதான் ஒளி படைத்ததாக மாறுகிறது!
வைரம் தானாக இறுகுவதால்தான்,கண்ணாடியை அறுக்கும் கடினத்தன்மை பெறுகிறது!

முத்து,வைரம் என நம்மை நாம் மட்டுமே மாற்ற முடியும்!
அடுத்தவருக்காக உன்னை மாற்றத் துவங்கினால், இறுதியில் உன் தனித்துவத்தை இழந்துவிடுவாய்!

உன்னை உனக்குப் பிடித்தபடி மாற்றிக்கொள்!

குயவனுக்கு களிமண்ணை மட்டும் பானையாக மாற்றத்தெரியும்!
பொற்கொல்லனுக்கு தங்கம்,வெள்ளி போன்றவைகளை தட்டி நகையாக மாற்றமட்டும் தெரியும்!
சிற்பிக்கு கல்லுக்குள் மறைந்து கிடக்கும் சிற்பத்தை எழுப்ப மட்டும் தெரியும்!

ஒரு பொற்கொல்லனை பானையைத் தட்ட விடலாமா?
சிற்பியிடம் நகையை உளிகொண்டு உடைக்க விடலாமா?
குயவனிடம் தங்கம் கொடுத்து அழிக்க விடலாமா?

நாம் தங்கமா,களிமண்ணா அல்லது சிற்பமாகப்போகும் கல்லா என்பது நமக்கு மட்டுமே தெரியும்!
சிற்பியாக வேண்டுமா,கொல்லனாக வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்தால் தான் உருப்படியான பயன்கிடைக்கும்!

புரிந்துகொளுங்கள்! நினைத்தபடி வாழ பிடித்தபடி மாறுங்கள்! மாற்றுவதை விட, மாறுவது சிறப்பு!

÷ராஜ்குமார்

Tuesday, August 9, 2016

படித்ததில் பிடித்தது 16 - எது அமைதி (குட்டிக்கதை)

நாட்ல அப்பப்போ ஏதாவது போட்டிகள் நடத்தி; வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

      ஒருமுறை 'அமைதி' ன்னா என்ன?  அப்படிங்கறத தத்ரூபமான ஓவியமா வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சாரு.

      இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தாங்க.!

        மன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வையிட்டுட்டே வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தாங்க.!

   ஒருத்தர் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் இருக்கற மாதிரி வரைஞ்சிருந்தாரு. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமா இருந்தது.!!

      மற்றொருத்தர் பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களை தத்ரூபமாக வரைஞ்சிருந்தாரு. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றினபடி ஓவியத்தில் பிரதிபலிச்சிருந்தாங்க.!

     ஆனா, ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமா கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்துச்சு. அதுமட்டுமா இடியோட மழை வேற கொட்டிட்டிருந்தது.
      இது அமைதியே அல்ல.  சற்று உற்று பார்த்தப்ப நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோட காணப்பட்டது.!!

   "இந்த ஓவியத்தை வரைந்தது யார்?" சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்பட்டாரு.!

     மன்னர்., " இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை. கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?" ன்னாரு.

       அதுக்கு ஓவியர், " மன்னா சப்தமும், பிரச்சனையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல ...!

      இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி.!

    அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது.!"

    "சபாஷ் .. அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்" னு கைதட்டின மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்!!.

   ஆக நண்பர்களே., அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்சனையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.
     ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, " நிச்சயம் ஒருநாள் விடியும் " என்று விடாமுயற்சியோட தினசரி உழைச்சிட்டிருக்காங்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி...!

Wednesday, April 20, 2016

யாரடி நீ!

யார் தூரிகையால் உனை வரைந்தாரோ! 
ந்த லோகத்திலே நீ பிறந்தாயோ!
சிரிப்பதும் முறைப்பதும் தவிர்ப்பதுமாய்-சில
ழக்கங்கள் நமக்குள் இருப்பதனால்,
நினைப்பினை இழந்தும் நினைக்கின்றேன்..
நின்கரம் தீண்டிடத்  துடிக்கின்றேன்...!

- ராஜ்குமார்  

மலரே பேசு


காற்று வீசும் திசையை எண்ணி
சில்லிடும் சாரல் அலைகிறது!
மெல்லிய காதலை சுமந்து என்னுயிர்
உன் பின்னால் திரிகிறது!

நீல வலைக்குள் விழுந்த நிலவை
இரவில் பார்க்கிறேன்.
முகத்தை மறைத்து விழிக்குள் விழிக்கும்
உனது நினைவில் வேர்க்கிறேன்!

லர்ந்தும் வளரும் மலரின் இனமே
உன் மனதைத் திறப்பாயோ!
கனவில் கரைந்து கண்ணில் வழியும்
நின்றன் காதல் சொல்வாயோ!

- ராஜ்குமார்