Wednesday, April 20, 2016

யாரடி நீ!

யார் தூரிகையால் உனை வரைந்தாரோ! 
ந்த லோகத்திலே நீ பிறந்தாயோ!
சிரிப்பதும் முறைப்பதும் தவிர்ப்பதுமாய்-சில
ழக்கங்கள் நமக்குள் இருப்பதனால்,
நினைப்பினை இழந்தும் நினைக்கின்றேன்..
நின்கரம் தீண்டிடத்  துடிக்கின்றேன்...!

- ராஜ்குமார்  

மலரே பேசு


காற்று வீசும் திசையை எண்ணி
சில்லிடும் சாரல் அலைகிறது!
மெல்லிய காதலை சுமந்து என்னுயிர்
உன் பின்னால் திரிகிறது!

நீல வலைக்குள் விழுந்த நிலவை
இரவில் பார்க்கிறேன்.
முகத்தை மறைத்து விழிக்குள் விழிக்கும்
உனது நினைவில் வேர்க்கிறேன்!

லர்ந்தும் வளரும் மலரின் இனமே
உன் மனதைத் திறப்பாயோ!
கனவில் கரைந்து கண்ணில் வழியும்
நின்றன் காதல் சொல்வாயோ!

- ராஜ்குமார்