Wednesday, September 28, 2016

சின்னதாய் ஒரு காதல் கதை!

ஒரே பள்ளியில்,ஒரே வகுப்பில்சேர்ந்த இருவருக்கும் ஒரேவயதுதான்!மூன்று வயதில் காதல்வருமா? வந்தது அவனுக்கு!அவள்,அவனை விட படிப்பில் சுட்டி!அருகில் வந்து அனுமதிகேட்காமல் அமர்ந்து பேசுபவள்!

கடையில் என்ன வாங்கிவந்தாலும் பங்கிட்டு அவனுக்கும்கொடுப்பவள்!

இதுபோன்ற பல காரணங்கள்இருந்தது அவனது காதலுக்கு!

அன்று வகுப்பு துவங்கியது!அவனுக்கு கவனம் முழுக்க அவள் மீதுதான்!

உடன் இருந்த நண்பன்சொன்னான்!,"டேய்.அவகிட்ட லவ்சொல்லிடு.இல்லனா அந்தசோடாபுட்டி உஷார்

பண்ணிடுவான்!" என்று!

"அவ கிட்ட போனாவே, என்னமோமாதிரி இருக்குடா.எப்படிசொல்றது?" என்று நண்பனைக்கேட்டான்

"ஒன்னுமில்ல டா..எதுவும்பேசவேணாம்! அவ முன்னாடிபோய் நின்னு, உன் காதுல விரல்வச்சு,யானை காதாட்டுற மாதிரிபண்ணு!அதுக்கு பேர் தான்காதலிக்கிறது! அவபுரிஞ்சுக்குவா!" என்ற

விஞ்ஞானப்பூர்வ அறிவுரையைநண்பன் வழங்க,அதை முயற்சித்துப் பார்ப்பதென அவன்முடிவு செய்தான்!

வகுப்பு முடிந்து அனைவரும்வெளியே சென்றுவிட, அவளும்அவனும் தனியாக வகுப்பில்!

"சாப்பிடப் போகலயா?" என தனதுLunch Box எடுத்துக்கொண்டுஅவள் கேட்க, இவன் எதுவும்பேசாமல்

அவள் முன்னால் சென்று"காதலித்து"க் காட்டினான்!அவ்வளவுதான்! அவள் கீழேபுரண்டு புரண்டு அழ

ஆரம்பித்தாள். சத்தம் கேட்டு ஆயாஎன்னவெனக் கேட்க,அவள் என்னசொல்வாளோ என்ற பயத்தில்அவன் நின்று கொண்டிருந்தான்.

"எனக்கு அம்மா வேணும்! வரச்சொல்லுங்க!" என அவள்நிறுத்தாமல்அழுதுகொண்டிருந்தாள்!

ஆயா, அவளைக் கூட்டிக்கொண்டுவெளியே சென்ற உடனே, அவனும்ஒரே ஓட்டமாக வெளியேசென்றான்!

அறிவுரை சொன்ன நண்பனைக்கடிந்து கொண்டான்! "Bubble Gumலவிட்ட குமிழ் மாதிரி அழகா இருந்தஅவ முகத்தில் கண்ணீரைப்பார்க்க வச்சிட்டியே!.போடா!" எனதிட்டித் தீர்த்தான்.

அடுத்தநாள் அவளது போலிஸ்அம்மாவுடன் பள்ளிக்கு வந்து,ஆசிரியையிடம் ஏதோ புகார்செய்துகொண்டிருந்தாள்! அவள்அம்மா சொன்ன கடைசி வார்த்தைமட்டும் தெளிவாகக்

கேட்டது! "இனி என்பொண்ணுகிட்ட அந்தமாதிரி சொன்னான்னு தெரிஞ்சா,அப்புறம் நான் யார்னு காட்ட

வேண்டியதுவரும்!".அவ்வளவுதான்! அதன்பிறகு அவளை அவன் பார்ப்பதுகூட இல்லை.அவளும் தான்!

அவள் அம்மாவிடம் என்னசொல்லியிருப்பாள் என்றகேள்விக்கு கடைசிவரைஅவனுக்கு விடைகிடைக்கவில்லை.

வருடங்கள் கடந்தன! பள்ளியில்பிரிந்த காதல், கல்லூரியில்சேர்ந்தது! ஒரே அலுவலகத்தில்சேர்ந்த அவர்களுக்கு காதலிக்கநேரம் உண்மையில்இல்லாமல்தான் இருந்தது!பெற்றோர் எதிர்ப்பை சம்மதமாகமற்றிய பிறகே இருவரும்திருமணம் செய்துகொண்டனர்!

முதல் இரவில் தனது நீண்டகாலக்குழப்பத்தைப் பற்றி அவளிடம்கேட்டான்! "உனக்கு நியாபகம்இருக்கா! நான் School-ல உங்கிட்டஇப்டி பண்ணிக்காட்டினேன் ல.அப்போ எதுக்கு அழுத?.வீட்லஎன்ன சொன்ன?" என காதில்கைவைத்தபடியே கேட்டான்!

"பின்ன! கொழுக்மொழுக்னுஇருந்த என்னை பார்த்துயானைனு சொன்னா கோவம்வராதா?" எனக் குழந்தைத்தனமாகக் கேட்டாள்!அவனுக்குத்தூக்கிவாரிப்போட்டது! "அப்படியா நினைத்தாய்?" என

ஆச்சரியமாகக் கேட்டான். "வேறஎன்னவாம்? எனக்கு ரொம்பவருசம் கோபம் உன் மேல!அப்புறம் எனக்கே என்னை பார்க்கஅப்படி தெரிய ஆரம்பிச்சது!அப்புறம், 12 ஆம் வகுப்பு முடிஞ்ச

உடனே Slimஆகிட்டேன்! எல்லாம் நீசொன்ன comments தான்காரணம்!.நம்ம காதலுக்கும்உன்னோட அந்த அக்கறை தான்காரணம்" எனச் சொல்லிமுடித்தாள்!

அவன் எதுவும் பேசவில்லை.தனது அசட்டு நண்பனின்ஐடியாவையும், தனதுமுட்டாள்தனமான புரிதலையும்நினைத்துப் புன்னகைத்துக்கொண்டான்!

காரணம் புரியவில்லை எனினும்,அவளும் புன்னகைத்துக்கொண்டாள்!

கதை புன்னகையோடு முடிகிறது!

- ராஜ்குமார்

Thursday, September 22, 2016

உண்மை எனும் கானல் நீர்

உண்மை.
எத்தனையோ நேரங்களில் மறுக்கப்படுவது..
பணம் செல்வாக்கு பதவி கொண்டு மறைக்கப்படுவது..
வெளிப்பட வேண்டி காத்திருக்க வைப்பது.. வெளிவந்துவிடுமோ என பயப்பட வைப்பது..

உண்மை.
நல்லதா..கொடியதா?
நண்பனா துரோகியா?
ஆக்கமா அழிவுசக்தியா?

உண்மை...
மறைந்தால் ரகசியம்!
மறைத்தால் கபடம்!
வெளிப்பட்டால் அம்பலம்!
வணங்கினால் கடவுள்!
ஏய்த்தால் ஆயுதம்!

ஆக,கூர்ந்து நோக்கினால் ,நம் மனம் எல்லா பொழுதிலும் உண்மையை வேண்டுவதில்லை என்பதே கசப்பான உண்மை..!

ஆகவே தான், ரகசியங்கள்,கடவுள்கள் போற்றப்படுகின்றன.

உடைக்கப்பட்ட உண்மைகள் சுவாரஸ்யத்தை இழக்கின்றன.!

சிந்திப்போம்.சிறப்போம்👍

பொய் வாழவிடாது..!
உண்மை சாக விடாது..!

உண்மையை மறைக்க ஆயிரம் பொய் அவசியமாகிறது..
பொய்களைத் தவிர்க்க ஒரு உண்மை போதுமானதாகிறது☺☺

- ராஜ்குமார்

Wednesday, September 21, 2016

உன் வாழ்க்கை உன் கையில்

உணவு பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்துவிட்டு பிடித்த உணவை வரவழைத்து உண்ணலாம்!
பிடித்த உறவுக்கு நம்மைப் பிடிக்கவில்லை எனில்,உணர்வுகளைப் புரியவைத்து மாற்றத்தை ரசிக்கலாம்!
உலகம் பிடிக்கவில்லைஎனில், உலகத்திற்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்!

நம் வாழ்க்கையின் போக்கு என்றுமே நாம் நினைத்தபடி அமைய வேண்டுமெனில், மாறவேண்டும் நாம் சில நேரம்!

முத்து சிப்பிக்குள் சுரக்கும்போதுதான் ஒளி படைத்ததாக மாறுகிறது!
வைரம் தானாக இறுகுவதால்தான்,கண்ணாடியை அறுக்கும் கடினத்தன்மை பெறுகிறது!

முத்து,வைரம் என நம்மை நாம் மட்டுமே மாற்ற முடியும்!
அடுத்தவருக்காக உன்னை மாற்றத் துவங்கினால், இறுதியில் உன் தனித்துவத்தை இழந்துவிடுவாய்!

உன்னை உனக்குப் பிடித்தபடி மாற்றிக்கொள்!

குயவனுக்கு களிமண்ணை மட்டும் பானையாக மாற்றத்தெரியும்!
பொற்கொல்லனுக்கு தங்கம்,வெள்ளி போன்றவைகளை தட்டி நகையாக மாற்றமட்டும் தெரியும்!
சிற்பிக்கு கல்லுக்குள் மறைந்து கிடக்கும் சிற்பத்தை எழுப்ப மட்டும் தெரியும்!

ஒரு பொற்கொல்லனை பானையைத் தட்ட விடலாமா?
சிற்பியிடம் நகையை உளிகொண்டு உடைக்க விடலாமா?
குயவனிடம் தங்கம் கொடுத்து அழிக்க விடலாமா?

நாம் தங்கமா,களிமண்ணா அல்லது சிற்பமாகப்போகும் கல்லா என்பது நமக்கு மட்டுமே தெரியும்!
சிற்பியாக வேண்டுமா,கொல்லனாக வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்தால் தான் உருப்படியான பயன்கிடைக்கும்!

புரிந்துகொளுங்கள்! நினைத்தபடி வாழ பிடித்தபடி மாறுங்கள்! மாற்றுவதை விட, மாறுவது சிறப்பு!

÷ராஜ்குமார்