Thursday, September 22, 2016

உண்மை எனும் கானல் நீர்

உண்மை.
எத்தனையோ நேரங்களில் மறுக்கப்படுவது..
பணம் செல்வாக்கு பதவி கொண்டு மறைக்கப்படுவது..
வெளிப்பட வேண்டி காத்திருக்க வைப்பது.. வெளிவந்துவிடுமோ என பயப்பட வைப்பது..

உண்மை.
நல்லதா..கொடியதா?
நண்பனா துரோகியா?
ஆக்கமா அழிவுசக்தியா?

உண்மை...
மறைந்தால் ரகசியம்!
மறைத்தால் கபடம்!
வெளிப்பட்டால் அம்பலம்!
வணங்கினால் கடவுள்!
ஏய்த்தால் ஆயுதம்!

ஆக,கூர்ந்து நோக்கினால் ,நம் மனம் எல்லா பொழுதிலும் உண்மையை வேண்டுவதில்லை என்பதே கசப்பான உண்மை..!

ஆகவே தான், ரகசியங்கள்,கடவுள்கள் போற்றப்படுகின்றன.

உடைக்கப்பட்ட உண்மைகள் சுவாரஸ்யத்தை இழக்கின்றன.!

சிந்திப்போம்.சிறப்போம்👍

பொய் வாழவிடாது..!
உண்மை சாக விடாது..!

உண்மையை மறைக்க ஆயிரம் பொய் அவசியமாகிறது..
பொய்களைத் தவிர்க்க ஒரு உண்மை போதுமானதாகிறது☺☺

- ராஜ்குமார்

1 comment:

  1. உண்மை
    எம்மைக் காக்கும்
    பொய்
    எம்மைக் கெடுக்கும்

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்