Wednesday, July 26, 2017

மயங்கும் மலர்களே..


மாலை மயங்கும் நேரம் மலர்ந்த மலர்களே...!
நீங்கள் எப்போதாவது
காதல் கொண்டதுண்டா?

மைவிழியின் வீச்சில் மையல் கொண்டு,
மஞ்சள் முகம்கண்டு மதி மயங்கி,
செம்மீன் உதட்டு வரிகளில் சிக்குண்டு,
சங்கு கழுத்தில் மனம் நழுவி,
அவள் சிந்தும் அழகுப் புன்னகைக்கு காத்திருந்து,
விழிகள் திறந்தபடி கனவுகள் கண்டதுண்டா?

காதலித்துப் பாருங்கள்...!

உங்கள் மகரந்தச் சேர்க்கையில்
புது உயிரோட்டம் காண்பீர்கள்!

தென்றல் காற்றில் அழகு நடனம் புரிவீர்கள்...!