Tuesday, August 15, 2017

வறுமையின் சுவடுகள்

என்சிறு வயதினில்
எண்ணற்ற கனவுகள்..
ஏங்கியன யாதென்று
எண்ணிப் பார்த்தால்
பனையோலைக் கடிகாரம்
பளபளக்கும் பாலீஷ் மணிகள்
வண்ணப் பலூன்கள்
வாய்ருசிக்கப் பணியாரம்!
கேட்டிருந்தால் ஒருவேளை
கிடைத்திருக்குமோ என்னமோ?
கேட்க நினைத்ததில்லை!
வறுமையின் அரங்கேற்றம்..
ஊமையானேன் நான்..
                  ** ** **
சிறுஊசி நூல்கோர்த்து
சேலைக்கிழிசல்களை
சிரித்தபடி தைத்திடுவாள் அம்மா..
ஒருமுனையை நான் பிடிக்க,
அவள் சொல்லும் கதைகேட்டு
உள்ளம் மகிழ்ந்திருந்தேன்!
வறுமையில் யாம் இருந்தோம்
என்ற நினைப்பையும் மறந்துவிட்டு...
                   ** ** **

மழைத்துளிகள்

நீர் காணா உயிர் அது மழையைக் கண்டு வியக்கும் நொடியில் ஒரு கவிதை....
________
*மழைத்துளிகள்..*

விண்ணின்று வழியும்
தண்ணீர் உதிரம்!
மேகச் சிப்பிகள்
சிந்தும் முத்துக்கள்!

மின்னல் பூக்களில்
சுரக்கும் தேன்துளிகள்!
இடிகள் பெயர்தெடுக்கும்
சுரங்கத்தின் வைரங்கள்!

மனதில் இன்பத்தைக் கருக்கொள்ள வைக்கும் மகரந்தத் துளிகள்!
தமிழ்சோலை பதுக்கி வைக்கும்
கவிதைப் பூத்தூவல்!

- ராஜ்குமார்