Tuesday, August 15, 2017

மழைத்துளிகள்

நீர் காணா உயிர் அது மழையைக் கண்டு வியக்கும் நொடியில் ஒரு கவிதை....
________
*மழைத்துளிகள்..*

விண்ணின்று வழியும்
தண்ணீர் உதிரம்!
மேகச் சிப்பிகள்
சிந்தும் முத்துக்கள்!

மின்னல் பூக்களில்
சுரக்கும் தேன்துளிகள்!
இடிகள் பெயர்தெடுக்கும்
சுரங்கத்தின் வைரங்கள்!

மனதில் இன்பத்தைக் கருக்கொள்ள வைக்கும் மகரந்தத் துளிகள்!
தமிழ்சோலை பதுக்கி வைக்கும்
கவிதைப் பூத்தூவல்!

- ராஜ்குமார்

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்