Wednesday, October 11, 2017

படித்ததில் பிடித்தது

*கேட்டது ஒன்று,!*
   *கிடைத்தது ஒன்று!!* 

ஆண்டவனிடம்,
வலிமை கேட்டேன்!
          கஷ்டங்களை
          கொடுத்தார்!!
எதிர் கொண்டேன்,
வலிமை பெற்றேன்.👍​
                 
அறிவு கேட்டேன்!
        பிரச்சினைகளை
        கொடுத்தார்!! 
சமாளித்தேன்                             
அறிவு பெற்றேன்.👍​

தைரியம் கேட்டேன் !
         ஆபத்துக்களை     
         கொடுத்தார் !!
சந்தித்து மீண்டேன்  ,
தைரியம் பெற்றேன். 👍

அன்பு கேட்டேன் ! 
         வம்பர்களை   
         கொடுத்தார்
அனுசரித்து சென்று
வம்பர்களின் அன்பையும் பெற்றேன். 👍​ 

வளமான வாழ்வு கேட்டேன்!    
       சிந்திக்கும் மூளையை
       கொடுத்தார்.
வளமான வாழ்வு கிடைத்தது.👍​

*கேட்டது ஒன்று,!*
         *கிடைத்தது ஒன்று!!*

*கிடைத்ததை வைத்து*
         *கேட்டதைப் பெற்றேன்*.👍​

*படித்ததில் பிடித்த ஒன்று..👆​*

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்