Tuesday, December 26, 2017

கன்பூசியஸ் சிந்தனை முத்துக்கள்

**மனிதன் இயற்கையிலேயே நல்லவன்.ஆகவே, தண்டனையோடு அவனை நெருங்குவது முட்டாள்தனம்!

**சிந்தனையில்லாத படிப்பு உபயோகமற்றது.படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது.

**தெரிந்ததை தெரியும் என்றும்,தெரியாததை தெரியாது என்றும் உணர்வது தான் அறிவு.

**நேர்மையானது எது எனத் தெரிந்தும்,அதைச் செய்யத் தவறுவது கோழைத்தனம்.

**முடிந்துபோன விஷயத்துக்கு விளக்கம் வேண்டாம்.
முன்னேறிச்செல்லும் விஷயத்துக்கு விளக்கம் வேண்டாம்.
இழைத்துவிட்ட தவறுகள் பற்றி,குற்றங்குறை கூறவேண்டாம்.

**அறிவாளி, யாரை வெறுப்பது,யாரை நேசிப்பது என்பதைத் தெளிவாக அறிவான்.

கல்வி என்பது....

கற்பது எப்போது என்பது,பள்ளியில் சேர்ந்த நாள் அன்று முடிவு செய்யப்படுவது அல்ல.தேவைகள் தோன்றும்போது,கற்பது தானாகத் துவங்கிவிடுகிறது.அப்படியானால்,அதற்கு முடிவு எப்போது என்று மட்டும் கேட்காதீர்கள்.ஏனெனில்,எது முடிவு என்பதைக் கற்றுக்கொள்ளவே முழு ஆயுளும் போதாது.
ஆகவே விரலைப் பார்த்து நேர விரயம் செய்யாமல், நிலவைப் பார்த்து ரசியுங்கள்.கல்வி பற்றி எண்ணாமல்,கற்பதைத் தொடங்குங்கள்.

ஒன்றைத் தெரியவில்லை என்று எப்போது நாம் உணர்கிறோமோ,அதனைக் கற்பதன் தேவை என்ன என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ,அந்த நொடியில்,நீங்கள் கற்க எண்ணியவை கண்முன் தானாகாத் தோன்றும்.அது,
மற்றவர் சொல்லிலிருந்தோ,புத்தகமாகவோ அல்லது காற்றில் பறந்து நம்மை அடையும் காகிதக் குப்பையாகவோ நிச்சயம் நம்மை அடையும்.ஆகவே, கற்கும் வாய்ப்பிற்காக,விழிப்புடன் காத்திருங்கள்.

அனைத்து வாய்ப்புகளும் கதவைத் தட்டுவதில்லை.
கதவைத் தட்டும் அனைத்தும்.இன்றையநாளில்,வாய்ப்புகளாக இருப்பதில்லை!!!

- ராஜ்குமார் (26-12-17)