Tuesday, January 30, 2018

பிரிவின் வலியில்..

காதலில் தவிக்கும் -என்
கண்களில் தூக்கம் இல்லை.
தனிமை கசக்கிறது!
நிமிடங்கள் சுடுகின்றன!

கவிதைகளைத் துணையாக விட்டுத்
தூரமாக நீ சென்று விட்டாய்! -என்னைக்
கவிதைகள் தூங்க விடுவதில்லை.
நானும் தான்..

நடுநிசியில் எழுந்துகொண்டு
எதுகை மோனை யோசிக்கிறேன்!
பசி வந்த பொழுதுகளில் -நம்
காதல் கவிதைகள் வாசிக்கிறேன் !

உருவகிக்க இயலாத உணர்வுப் பிடியில்
உள்ளம் நோகிறது!
பரிதவிக்கும் நான்!
தூரமாய்  நீ ! - நிஜம்
சுடுகிறது!

- ராஜ்குமார்