Tuesday, August 10, 2010

கவிஞனின் திறமை


காடு, மலை,மேடு கடந்து
இமயத்தின் உயரத்தை நொடியில் தாண்டி,

உயர்ந்த வானத்தின் நீலம் கடந்து,
எதிர்படும் கோள்களை எட்டி உதைத்து,

இருளாய் நிறைந்த வெட்ட வெளியிலே,
விண்வெளி கல்லின் மேலே அமர்ந்து,

மேம்பட்ட வரிகளைப் படைக்கும் ஆற்றல்
கவிஞனுக்கு மட்டுமே உண்டு....

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்