Friday, November 27, 2015

எது வாழ்க்கை! - 1

எது வாழ்க்கை!
 - ராஜ்குமார் 

ஒரு மனிதன், தகுதியால் அல்லாமல் பிறரால் உயரத்தில் வைக்கப்படும்போது அவன் ஆணவம் மிகுந்தவன் ஆகிறான்.உயர்த்திவர்கள்,தம் ஆரம்ப நிலையில் உதவியவர்கள் என அனைவரையும் மதிக்கத் தவறுகிறான்.அன்றைய நாளில் ஆதாயம் கிடைக்கும் என்றால் மட்டுமே சிலரிடம் சிரித்துப் பேசுகிறான்.

குடும்பம் என்பது காதல்,புரிதல் அதை விட பொறுத்து அருளுதல் ஆகியவற்றைப் பொறுத்தே இனிமையானதாக அமைகிறது.ஆனால் என்று பணம் என்ற ஒன்றைச் சுற்றியபடி குடும்ப வாழ்க்கை நகர்கிறதோ அன்று பிரச்சினைகளுக்கான துவக்கம் இனிதே ஆரம்பமாகிறது.

உதாரணமாக,கணவன் மனைவிக்குள் தோன்றும் சண்டைகளைப் பார்ப்போம்.
நாம் நினைக்கலாம், கணவனின் பணத்தேவை, மனைவியின் அறியாமை அல்லது அழகு சார்ந்த தாழ்வுணர்வுகள் தான் காரணங்கள் என்று.அவை வெறும் கற்பனைகளே! ஆம். மிகப்பெரிய பணக்காரர் இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் மகன் மற்றும் டிவிஎஸ் நிறுவனரின் ஒரே அழகிய மகள் ஆகியோர் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்று கடந்த மாதம் நீதிமன்றத்தில் முறிவு பெற்றது.ஆச்சரியம் தானே! ஒரு உண்மை என்னவெனில்,கணவன் மனை சண்டைகளுக்கு காரணம் என்று ஒன்று இல்லவே இல்லை.எல்லாம் கண்ணுக்குத் தெரியாத உணர்வுப் போராட்டங்களே!

கணவன் மனைவிக்குள் உள்ள உறவு, நினைத்த உடன் நம் மனதில் மகிழ்ச்சியை அள்ளித் தெளிப்பதாக இருக்க வேண்டும்.இருவர் மனமும் எப்போது முகம் பார்ப்பேன் என ஏங்கித் தவிக்க வேண்டும்.இதெல்லாம் சாத்தியமா எனக் கேட்கலாம்.நிச்சயம் என்பதே என் பதில்.