Showing posts with label பாடல்வரிகள். Show all posts
Showing posts with label பாடல்வரிகள். Show all posts

Wednesday, August 24, 2011

ஒரு பொய்யாவது சொல் கண்ணே!

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதை தாங்குமா என் நெஞ்சம் (2)

பெண்மையும் மென்மையும் பக்கம் பக்கம் தான்
ரொம்ப பக்கம் பக்கம் தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்

இரவினை திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ (2)
நிலவின் ஒளி திரட்டி கண்கள் செய்தாரோ
விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கை ரேகை செய்தாரோ
வாடை காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம் தங்கம் பூசி தோள் செய்தாரோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தாரோ?

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே (2)
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே!
கங்கை கங்கை ஆற்றை,
கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றை,
கண்ணில் கையில் தந்தவள் நீதானே !

ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ?
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ?

Friday, August 19, 2011

தாலட்டு பாட்டு-2


தாலட்டுப் பாட்டு-1

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ!!

கண்ணே உறங்குறங்கு, என் கண்மணியே நீயுறங்கு!
பொன்னே உறங்குறங்கு, என் பூங்கிளியே நீயுறங்கு!

கண்ணை அடித்தார் யார்? எந்தன் கண்மணியைத் தொட்டார் யார்?
பொன்னை அடித்தார் யார்? என் பூங்கிளியைத் தொட்டார் யார்?

யாரடித்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது?
எவரடித்து கண்ணீர் குளமாய்த் தேங்கியது?

மாமன் அடித்தனோ மல்லிகைப்பூ செண்டாலே?
அத்தை அடித்தளோ அரளிப்பூ செண்டாலே?
பாட்டி அடித்தளோ பால் புகட்டும் சங்காலே?
சித்தி அடித்தளோ சின்னஞ்சிறு விரலாலே?

 யாரடிச்சு நீ அழர? கண்ணே நீ கண்ணுரங்கு!
யாரடித்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது?

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ!!

அம்மா பாட்டு

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!

இலையில் சோறைப் போட்டு,
ஈயைத் தூர ஓட்டு!

உன்னைப் போல நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?

என்னால் உனக்குத் தொல்லை,
ஏதும் இங்கே இல்லை!

ஐயம் இன்றிச் சொல்வேன்,
ஒற்றுமை என்றும் பலமாம்!
ஓதும் செயலே நலமாம்!
ஔவை சொன்ன மொழியாம்!
அஃதே எனக்கு வழியாம்!

Wednesday, August 3, 2011

இரு வல்லவர்கள்- நான் மலரோடு தனியாக!!

 படைப்பு          : கண்ணதாசன்
ஒலிவடிவம்  : (இங்கு சொடுக்கவும்)

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்.(2)

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்.
(நான் மலரோடு தனியாக ...)

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?(2)

உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்?(2)
(நீ இல்லாமல்...)

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத,
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட, (2)

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற!!(2)

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்.

(நான் மலரோடு தனியாக)

Thursday, July 14, 2011

பொய்யோ? மெய்யோ? - பாரதியார்

நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!
நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே! கேட்பதுவே! கருதுவதே!
நீங்கள் எல்லாம் அர்த்தமாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
[நிற்பதுவே]

பத்தி 1:
வானகமே! இளவெயிலே! மரச்சரிவே!
நீங்கள் எல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
உடைந்தழிந்தே போனதனால்
நானு ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
[நிற்பதுவே]

பத்தி 2:
காலமென்றே ஒரு நினைவும்,
காட்சி என்று பல நினைவும்,
கோலமும் பொய்களோ?
அந்த குணங்களும் பொய்களோ?
காண்பதெல்லாம் மறையுமென்றால்,
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானு ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
[நிற்பதுவே]