Thursday, July 28, 2011

மனிதர்கள் (எனது "காந்திபுரம் பஸ்ஸ்டேண்ட் பக்கத்துல" கதையிலிருந்து)

என்ன மனுஷ வாழ்க்கை இது?
ஏதோ அலார கடிகாரம் மாதிரி, அப்பப்போ எழுப்பிவிட்டுகிட்டே இருக்குற மனிதர்கள்
நம்மை சுற்றியும்.
நம்மை நம்ம இஷ்டத்துல வாழவிட மாட்டீங்கறாங்க.

பல ஆயிரம் சம்பாதிக்கறவனும்,நாளுக்கு 10 ரூபாய் சம்பாதிக்கறவனும்
எத்தனையோ விஷயங்கள்ல வேறுபடுறாங்க. ஆனா தேவைகள் ஆளாளுக்கு
வேறுபடுற மாதிரி இருந்தாலும், எல்லாமே இருக்குற எடத்துல இருந்து இளநீர் பறிக்கிற முயற்சி தான்.
பல ஆயிரம் சீக்கிரம் பறிச்சுடுது. ஆனா பத்துகளுக்கு கொஞ்சம் காலம் பிடிக்குது.

பல வித மனிதர்கள் பலவித கண்ணோட்டங்கள்!! எல்லா வித மனிதர்களையும் அனுசரித்து வாழப் பழகுவது
கூட தனி
பட்டப் படிப்பு தான்!!

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்