Wednesday, April 20, 2016

மலரே பேசு


காற்று வீசும் திசையை எண்ணி
சில்லிடும் சாரல் அலைகிறது!
மெல்லிய காதலை சுமந்து என்னுயிர்
உன் பின்னால் திரிகிறது!

நீல வலைக்குள் விழுந்த நிலவை
இரவில் பார்க்கிறேன்.
முகத்தை மறைத்து விழிக்குள் விழிக்கும்
உனது நினைவில் வேர்க்கிறேன்!

லர்ந்தும் வளரும் மலரின் இனமே
உன் மனதைத் திறப்பாயோ!
கனவில் கரைந்து கண்ணில் வழியும்
நின்றன் காதல் சொல்வாயோ!

- ராஜ்குமார்

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்