Wednesday, September 21, 2016

உன் வாழ்க்கை உன் கையில்

உணவு பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்துவிட்டு பிடித்த உணவை வரவழைத்து உண்ணலாம்!
பிடித்த உறவுக்கு நம்மைப் பிடிக்கவில்லை எனில்,உணர்வுகளைப் புரியவைத்து மாற்றத்தை ரசிக்கலாம்!
உலகம் பிடிக்கவில்லைஎனில், உலகத்திற்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்!

நம் வாழ்க்கையின் போக்கு என்றுமே நாம் நினைத்தபடி அமைய வேண்டுமெனில், மாறவேண்டும் நாம் சில நேரம்!

முத்து சிப்பிக்குள் சுரக்கும்போதுதான் ஒளி படைத்ததாக மாறுகிறது!
வைரம் தானாக இறுகுவதால்தான்,கண்ணாடியை அறுக்கும் கடினத்தன்மை பெறுகிறது!

முத்து,வைரம் என நம்மை நாம் மட்டுமே மாற்ற முடியும்!
அடுத்தவருக்காக உன்னை மாற்றத் துவங்கினால், இறுதியில் உன் தனித்துவத்தை இழந்துவிடுவாய்!

உன்னை உனக்குப் பிடித்தபடி மாற்றிக்கொள்!

குயவனுக்கு களிமண்ணை மட்டும் பானையாக மாற்றத்தெரியும்!
பொற்கொல்லனுக்கு தங்கம்,வெள்ளி போன்றவைகளை தட்டி நகையாக மாற்றமட்டும் தெரியும்!
சிற்பிக்கு கல்லுக்குள் மறைந்து கிடக்கும் சிற்பத்தை எழுப்ப மட்டும் தெரியும்!

ஒரு பொற்கொல்லனை பானையைத் தட்ட விடலாமா?
சிற்பியிடம் நகையை உளிகொண்டு உடைக்க விடலாமா?
குயவனிடம் தங்கம் கொடுத்து அழிக்க விடலாமா?

நாம் தங்கமா,களிமண்ணா அல்லது சிற்பமாகப்போகும் கல்லா என்பது நமக்கு மட்டுமே தெரியும்!
சிற்பியாக வேண்டுமா,கொல்லனாக வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்தால் தான் உருப்படியான பயன்கிடைக்கும்!

புரிந்துகொளுங்கள்! நினைத்தபடி வாழ பிடித்தபடி மாறுங்கள்! மாற்றுவதை விட, மாறுவது சிறப்பு!

÷ராஜ்குமார்

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்