Tuesday, January 1, 2013

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடியே ஆக வேண்டுமா?

இந்தக் கேள்விக்கான விடையை ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது.கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
(இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்து- ராஜ்குமார்)

தமிழன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருந்தான் ? இருக்கவேண்டும்?
நம்மைப்போன்றா எனக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன்.

அன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளைப் படித்துப்பாருங்கள்.அவர்களின் மேன்மை தெரியும்.அவர்கள் பிற நாட்டு கலாச்சாரங்களை பிற நாட்டு மக்களை அனுசரித்து வாழ்ந்தார்கள்.அதைவிட தமிழ்பண்பாட்டை உயிருக்குமதிகமாக மதித்து வாழ்ந்தார்கள்.

இன்று மற்ற பண்பாடுகளின் மீதான அந்த மதிப்பு, மோகமாய் மாறிவிட்டது.தமிழ்பண்பாடு தெருக்குப்பையாகத் தெரிகிறது நம்மவர்க்கு.




ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பை விடிய விடிய விழித்திருந்து கொண்டாடுகிறார்கள் .தமிழ்புத்தாண்டு என்பது அவர்களுக்கு ஞாயிறுபோல ஒரு விடுமுறைநாள்.அவ்வளவுதான்.எத்தனை பேர் இன்றைய தமிழ் தேதி மற்றும் மாதத்தை தெரிந்து வைத்திருக்கிறோம் ? இதுபோல நம்மைத் தமிழன் என்று உணர வைக்கும் பலவற்றை நாம் ஒதுக்கிவிட்டோம்.மேற்சொன்னவை வெகுசிலவே.

என்னுடன் பணியாற்றும் மென்பொருள் பொறியாளர்களில் பலர் சொல்லி நான் வருத்தப்பட்ட ஒரு செய்தி,அவர்கள் ஒரு வார்த்தையாவது தமிழில் எழுதிப்பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதுதான்.இதை என்னவெனச் சொல்வது?யாரிடம் சென்று முறையிடுவது?அவ்வளவு நமக்கு ஆங்கிலம் பெரிதாகப் போய்விட்டதா?தன்னை வளர்த்த தாயைவிட பணம் கொடுக்கும் முதலாளி உயர்ந்தவானாகி விடுவானா?ஒரு மணித்துளியாவது இதனை நாம்  எண்ணிப்பார்க்கவேண்டும்.

தமிழ்மொழி நமக்கு தாய்மொழி .  இன்று வரை அப்படித்தான் இருக்கிறது.இனியும் இப்படியே இருக்கவேண்டும் என நினைத்தால், இனி தமிழர்களாகிய நாம்தான் தமிழுக்குத் தாய்   என நினைத்துக்கொள்வோம்.தமிழ் என்ற நம் குழந்தை எங்காவது வதைபட்டால்,தலைகுனிய நேர்ந்தால் தாங்கும் தோள்களாக ,தட்டிக்கொடுக்கும் கரங்களாக நாம் இனி இருப்போம்.இன்று இந்த உறுதியை,தமிழராகிய அனைவரும் எடுப்போம்!

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடுங்கள் - நாம் தமிழர்கள் என்ற எண்ணத்தை மனதில் நிறுத்திக்கொண்டு.

2 comments:

  1. nalla karuthu :-) arpudham endra sollai nan ubayogiththuk kondu dhan irukiren :-)

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்