Friday, November 7, 2014

என் கற்பனைக் காதலி (சந்தக்கவிதை)


கன்னத்தில் குழிவிழும் அழகியவள் -கால்
சலங்கையில் ஜதி சொல்லும் யுவதியவள் !

வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனித்திருக்கும் -அவள்
திருமுகம் பார்த்திட மனம் துடிக்கும் !

தினம்தினம் புதிதாய்க் காதலிப்பாள் -என்னுள்
திரும்பிய திசையெல்லாம் சிரித்திருப்பாள் !

உயிருடன் நடந்திடும் ஓவியமே -என்னை
உனதொரு ரசிகனாய் மாற்றிவிட்டாய் !

பார்வைகள் ஒவ்வொன்றும் இனிய சுகம் -மனம்
கவிதைகள் படைத்திடும் புதியவிதம் !

இனியவளே உன்னைக் காதலித்தேன்-என்
உயிராய் உன்னைத் தினம் நினைத்தேன்!

இளமை மாறா இளங்கிளியே -நித்தம்
வருவாயோ என்னை மகிழ்த்திடவே!

என் தாள்களில் எல்லாம் கவிதைச் சத்தம் -உன்னைக்
கண்டதும் கேட்பேன் நூறு முத்தம்!!

- ராஜ்குமார்

1 comment:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்