Wednesday, November 14, 2018

ரசிகை

என் எழுத்துகளுக்குக் காத்திருக்கின்றன
அவள் விழிகள்.
என் கவிதை பாடக் காத்திருக்கின்றன
அவள் மொழிகள்..!

என்ன எழுதிக்கொடுத்தாலும் - அவள்
படித்துக்கொண்டே இருப்பாள்!
நான் எழுதுவதை நிறுத்தினாலும் - அவள்
வாசிப்பு ஓய்ந்ததில்லை.

எனது வரிகளை
விழிகளால் சுவைத்து
விழுங்கத் துடிக்கும்
அவளது பசி ,குறையாதது!

அவள் மீது எனக்கும்,
என் கவிதைகள் மீது அவளுக்கும் ,
இழையோடும் உறவு
காதல் சேராதது...காமம் தோயாதது...!

கண்ணீராய், வெட்கங்களாய் ,
புன்னகையாய் ,பூரிப்பாய்
எனது எழுத்துக்களுக்கு-தினம்தினம்
அவளின் கைத்தட்டல்கள்...!

இதோ
எழுதுவதற்கு நான் தயாராகி விட்டேன்.
எங்கே எனது அந்த ரசிகை?

- ராஜ்குமார் (02/11/18 9:00)

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்