Monday, November 19, 2018

ஈரமான நெஞ்சம்..

என்னவளிடம் கேட்டேன்..
என்னைப் போன்ற ஒருவனை நீ
சந்தித்தது உண்டா? என்று..

இல்லை என்று சொல்வாள் என
எண்ணிக் கேட்ட கேள்வி அது..

அலட்டல் இல்லாமல் அவள் சொன்னாள்
"உண்டு" என்று..

கோபத்தை உள்வைத்து
ஆர்வமாய் முகம் வைத்து,
"யாரென்று சொல் கண்ணே!" என்று
அமைதியாகக் கேட்டேன்..

நெருங்கி என்னிடம் வந்து,
நெற்றிமுடி வருடியபடி சொன்னாள் ..
" இரவு முடிந்த பின்னும்
மலரிதழ்களின் ஈரம் காய்ந்திடாது பெய்யும்
வான் மழையும் நீயும் ஒன்றுதானே!" என்றாள் ..

புன்சிரிப்பு என்னிடம்...குறும்புச் சிரிப்பு அவளிடம்...

- ராஜ்குமார்
16-11-18 23:45
 

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்