Wednesday, November 14, 2018

தனிமை

பலநாள் கழித்து
என் வீட்டுக்குள் நுழைந்தேன்..

சிதறிக் கிடந்த தானியங்களை
எறும்புகள் தின்றிருந்தன.
சிறு பூச்சிகள் சிலந்திவலையில்
சிக்கிக் கிடந்தன..

வாடி உதிர்ந்த காகிதப் பூக்களைக்
காற்று எடுத்துச் சென்றிருந்தது..

ஆனால்,

என் தனிமை மட்டும்
தின்னப் படாமல்
எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது..!

                          *        *        *

என் தனிமையை இசை தின்று தீர்க்கிறது..
ஸ்வரங்கள் இனிமையில்
நான் தொலையும் தருணத்தில்
என்னையும் தின்றுவிட்டு
ஏப்பம் விடுகிறது இசை...!

- ராஜ்குமார் (02/11/18 11:00)

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்